.

.

Tuesday, November 4, 2014

விஜய் லண்டனில் உள்ள தன் நண்பர்கள் மற்றும் மாமியார் குடும்பத்தினருடன் ஒய்வு!!!

4th of November 2014
சென்னை:கத்தி படத்தை வெளியிடுவதற்குள் ஏகபட்ட பிரச்சனைகள் நடந்தது.
இதனால் விஜய் மனம் வருத்தத்தில் இருந்தார் ஆனால் கத்தி படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது வசூலிலும் 100 கோடியை தாண்டி மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது.

இதனால் எல்லா கவலைகளையும் மறந்து தற்போது சந்தோசத்தில் இருக்கிறார் கத்தி படத்தை வெற்றி படமாக்கி கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமிபத்தில் இந்துஸ்தான் காலேஜுக்கு சென்று கத்தி படத்தின் வெற்றி விழாவை கொண்டாடினார்.

இதில் இயக்குனர் எ ஆர் முருகதாஸ் ,இசையமைப்பாளர் அணிருத்தும் கலந்து கொண்டனர் அதன்பிறகு சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் கத்தி படத்தின் வெற்றி தொடர்பாக
பத்திரிகையாளர்களையும் சந்தித்தார்.

தற்போது லண்டனில் உள்ள தன் நண்பர்கள் மற்றும் மாமியார் குடும்பத்தினருடன் ஒய்வு எடுப்பதற்காக தன் மனைவி குழந்தைகளுடன் லண்டன் சென்று இருக்கிறார் அடுத்த வாரம் சென்னை திரும்ப உள்ளார்.

No comments:

Post a Comment