.

.

Friday, November 21, 2014

கோவா திரைப்பட விழாவில் ரஜினிக்கு சிறந்த திரையுலக பிரமுகர் விருது: அமிதாப் வழங்கினார்!!!

21st of November 2014
சென்னை:இந்திய சினிமா நூற்றாண்டையொட்டி சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துக்கு 2014-ஆம் ஆண்டின் சிறந்த திரையுலக பிரமுகர் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கோவாவில் நேற்று  45-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரி அருண் ஜெட்லி விழாவை தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், ரஜினி காந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில், ரஜினிகாந்துக்கு சிறந்த திரையுலக பிரமுகருக்கான விருது வழங்கப்பட்டது. மத்திய மந்திரி அருண் ஜெட்லி, நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் இணைந்து வழங்க, ரஜினிகாந்த் விருதினை பெற்றுக்கொண்டார்.

விருதினை பெற்றுக்கொண்ட ரஜினி காந்த், அமிதாப்பின் காலைத் தொட்டு வணங்கினார். பின்னர் பேசிய ரஜினிகாந்த், மத்திய அரசு வழங்கிய இந்த விருதினை தனக்கு அளிக்கப்பட்ட கவுரவமாக கருதுவதாகவும், தனது வெற்றிக்கு ஆதரவாக இருந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இந்த விருதை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தார்.

வரும் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் 75 நாடுகளை சேர்ந்த 179 படங்கள் திரையிடப்படுகின்றன.

No comments:

Post a Comment