.

.

Friday, August 22, 2014

ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி!!!

22nd of August 2014
சென்னை:காதல் நாயகனாக பிரபலமாகி, ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்து தற்போது குடும்பக் கதை நாயகனாக பரத் நடித்திருக்கும் படம் தான் 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி'.

18 ஆயிரம் கேட்டால் 20 ஆயிரம் கொடுப்பது, 100 ரூபாய்க்கு 200 ரூபாய் கொடுப்பது, என்று சுத்தமாக எழுதப் படிக்கத் தெரியாத பரத், தனது குடும்ப தொழிலான சித்த வைத்தியத்தை செய்து வருகிறார். பரத்தின் படிப்பின்மையை பயன்படுத்தி அவருடைய நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் அவரை ஏமாற்றி வருகிறார்கள். இதனால், படித்த பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்க பரத்தின் அம்மா முடிவு செய்கிறார். ஆனால், பரத் படிக்காததால் அவருக்கு படித்த பெண்களை கொடுக்க யாரும் முன்வருவதில்லை. இதனால், திருமண புரோக்கரின் ஆலோசனைப்படி, படித்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொள்ள முடிவு எடுக்கும் பரத், கல்லூரி வாசலில் தனது காதல் பணிக்கு அச்சாரம்  போடுகிறார்.

அந்த கல்லூரியில் நந்திதாவை பார்க்கும் பரத், இவர் தான் தனது மனைவி என்று முடிவு செய்து அவரை தொடர்ந்து செல்ல, நந்திதாவின் அப்பா தம்பிராமையா, சித்த வைத்தியர் பரத்தை எம்.பி.பி.எஸ் டாக்டர் என்று தவறாக நினைத்துக்கொண்டு தனது பெண்ணை பரத்துக்கு திருமணம் செய்துகொடுக்க முடிவு செய்கிறார்.

இதற்கிடையில், பரத்தை ஏமாற்றி வாழ்க்கையை ஓட்டும்  அவருடைய நண்பர்கள், படித்த பெண்ணை பரத் திருமணம் செய்துகொண்டால் அவரை  தொடர்ந்து ஏமாற்ற முடியாது என்று எண்ணி, அவருடைய திருமணத்தை நிறுத்த முயற்சி செய்கிறார்கள்.

இந்த முயற்சிகளை முறியடித்து நந்திதாவை பரத் கரம் பிடிக்கிறார். தனது மனைவி படித்தவள் என்று பரத்தும், தனது மருமகள் படித்தவள் என்று பரத்தின் அம்மா ரேணுகாவும் நந்திதாவுக்கு குடும்ப பொறுப்புகளை கொடுக்க, அங்கே தான் தெரிகிறது நந்திதாவும் எழுத படிக்க தெரியாதவர் என்று.

பரத்தின் அம்மாவைப் போல, தம்பிராமையாவும் படிக்காத தனது மகளுக்கு படித்த மாப்பிளையை மணம் முடிக்க, இருவரும் ஒருவருக்கொருவர் தங்களை ஏமாற்றிக் கொண்டதால், உண்மை தெரியாமல் இருக்க அவர்களின் சமாளிப்பும், அதனால் சந்திக்கும் பிரச்சனைகளும், அந்த பிரச்சனைகளால் ஏற்படும் விளைவுகளையும், காமெடியுடன் குடும்ப பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் எல்.ஜி.ரவிச்சந்தர்.

முதல் முறையாக பரத் காமெடி பக்கம் வந்திருக்கிறார். எழுத படிக்க தெரியாத தனது முட்டாள் தனத்தால் அவர் ஏமாறும் போது நமேக்கே அவர் மீது பரிதாபம் வருகிறது. காதல், காமெடி, அவ்வபோது ஆக்ஷன் என்று தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.

நந்திதாவும் எப்போதும் போல, பக்கத்து வீட்டு பெண்ணாக தோன்றினாலும், இந்த படத்தில் சற்று நடனம் ஆடுவதுதான்  கமர்ஷியல் நாயகியாவதற்காக சிறு முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.

தம்பிராமையாவின் சோலோ நகைச்சுவை நமக்கு சிரிப்பு வரவைக்கவில்லை என்றாலும், சாம்ஸுடன் சேர்ந்து அவர் செய்யும் முட்டை காமெடி நமக்கு கிச்சு கிச்சு மூட்டுகிறது.

மனோபாலா, இமான் அண்ணாச்சி, சிங்கம் புலி, படவா கோபி, சூது கவ்வும் கருணாகரன், மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர்    என்று படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தும் நகைச்சுவை ஊறுகாய் அளவுக்கே உள்ளது.

சிமொனின் பாடல்கள் ரசிக்கவும், தாளம் போடவும் வைக்கிறது. பிரமிக்க வைக்க கூடிய அளவுக்கு பி.ஜி.முத்தையாவின் கேமரா  எதையும் செய்யவில்லை என்றாலும், நம் கண்களை  உறுத்தாமல் காட்சிகள் அனைத்தையும் ரொம்பவே தெளிவாக காட்டுகிறது.

செல்வங்களில் சிறந்த செல்வம் கல்வி தான் என்பதையும், படிப்பறிவு இல்லாத மனிதன் இந்த சமூகத்தில் எப்படி கஷ்ட்டப்படுவார் என்பதையும் நகைச்சுவையாகவும், செண்டிமெண்டாகவும் இயக்குனர் சொல்லியிருக்கும் விதத்திற்காக சபாஷ் போடலாம்.

தற்போதைய தமிழ் சினிமாவின் டிரெண்ட் எதுவாக இருந்தாலும், இதுபோன்ற படங்களுக்காக தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில், 80 களில் தமிழ் சினிமா இயக்குனர்கள் கடைபிடித்து வந்த பார்முலாவில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் ரவிச்சந்திரன்.

நாயகன்  அறிமுகம், நாயகி அறிமுகம், பிறகு ஒரு பாடல், அதற்கு பிறகு ஒரு பைட், பிறகு ஒரு டிவிஸ்ட், சோகம், பாசம், க்ளைமாக்சுக்கு முன்னாடி ஒரு பைட், ஒரு எதிர்ப்பார்ப்பு என்று பாக்யராஜியின் பாணியில் இப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் எல்.ஜி.ரவிச்சந்தர், சீரியல் பக்கம் ஈர்க்கப்பட்ட தாய்க்குலங்களை, மீண்டும் சினிமா பக்கம் ஈர்க்க முயற்சித்திருக்கிறார்.

Wednesday, August 13, 2014

விக்ரம் பிரபு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்!!!

13th of August 2014
சென்னை:கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு ‘நெற்றிக்கண்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ‘ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்’ என டூயட் பாடிய நடிகை மேனகாவை ஞாபகம் இருக்கிறதா..? அவரது செல்ல மகள் தான் இந்த கீர்த்தி சுரேஷ்.. இவர் இப்போது மலையாளத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அறிமுகமான காலகட்டத்திலேயே மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘கீதாஞ்சலி’ மற்றும் திலீப்புடன் ‘ரிங் மாஸ்டர்’ என இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவிட்டார் கீர்த்தி. அதிலும் ‘ரிங் மாஸ்டர்’படத்தில் கண் பார்வையற்ற பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார்.
இப்போது இவரை தமிழுக்கு கொண்டுவரும் முயற்சியின் பலனாக ஏ.எல்.விஜய் டைரக்ஷனில் விக்ரம் பிரபு நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.. 

இன்னும் சில தினங்களில் இந்த தகவல் உறுதியாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதன் படப்படிப்பு செப்டம்பரில் ஆரம்பிக்க இருக்கிறதாம்.

Sunday, August 10, 2014

பிராணிகள் மீது பிரியம்: தெருநாயை தத்தெடுத்தார் சமந்தா!!!

10th of August 2014 
சென்னை:பிராணிகள் மீது பிரியம் கொண்ட நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் த்ரிஷா மிகவும் குறிப்பிடத்தக்கவர். வெளியில் அநாதையாக திரியும் நாய்களை கூட வீட்டுக்கு எடுத்து வந்து வளர்க்கும் பாசமுடையவர் த்ரிஷா,

அவரை போன்று நடிகை சமந்தாவும் பிராணிகள் மீது பிரியம் கொண்டவர் போலும்! சமீபத்தில் ரோட்டில் அழகான ஒரு நாய் சுற்றித் திரிந்து கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார் சமந்தா! ஃபர்ஸ்ட் லுக்கிலேயே அதனை பிடித்துவிட்டதாம் சமந்தாவுக்கு,

உடனே அதனை வீட்டுக்கு எடுத்து வந்து, அதற்கு NORI என்று பெயரும் சூட்டப்பட்டு, அதனை தனது குடும்பத்தில் ஒரு அங்கமாக்கி விட்டிருக்கிறார். சமந்தாவின் பாசத்துக்கு ஆளான அந்த நாய் அதிர்ஷ்டக்கார நாய் தான்,

எங்கள் வீட்டுக்கு இப்போது ஒரு புதிய விருந்தினர் வந்திருக்கிறார் அவர் பெயர் நூரி. அவர் வந்ததில் இருந்து சந்தோஷமாக இருக்கிறேன். அவரும் சந்தோஷமாக இருக்கிறார். நாய்களை வாங்காதீர்கள். தத்தெடுங்கள்" என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் சமந்தா.

இரும்புக்குதிரை படத்தில் பைக் ரேசராக நடித்துள்ள அதர்வா!!!

10th of August 2014
சென்னை:இரும்புக்குதிரை படத்தில் பைக் ரேசராக நடித்துள்ள அதர்வா. அஜீத் ஒரு பைக ரேசர் என்பதால் அவரை தூரத்தில் நின்று ஆச்சர்யமாக பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது நானே ஒரு படத்தில் பைக் ரேசராக நடித்திருக்கிறேன். இது சந்தோசம்தான் என்றாலும், அந்த விளையாட்டு எவ்வளவு ஆபத்தானது என்பதையும் அறிந்து கொண்டேன் என்கிறார்.
 
மேலும் இந்த படத்தில் கெத்தான வில்லனாக நடித்துள்ள ஜானியுடன், பைக்கில் பயணித்தபடி ஒரு சண்டை காட்சியில் நடித்துள்ளாராம் அதர்வா. அந்த காட்சியில் கதைப்படி அதர்வாவின் காதலியான ப்ரியாஆனந்தும் பைக்கிற்கு பின்னால் உட்கார்ந்திருப்பாராம். அப்போது பைக்கை வேகமாக ஓட்டியபடி அதர்வா நடித்தபோது அவரை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த ப்ரியாஆனந்த் பயத்தில் அவ்வப்போது அலறிக் கொண்டேயிருந்தாராம்.
 
ஒருகட்டத்தில் அவரது அலறல் அதிகமாகி விட்டது என்றாலும், கதைப்படி அவர் அதர்வாவுடன் இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் இருந்ததால் அவரையும் வைத்து படமாக்கினார்களாம். அப்போது ஒருமுறை, பைக் ஒரு மரத்தில் மோதி அதர்வாவும், ப்ரியாஆனந்தும் கீழே விழும் காட்சியில் நிஜமாலுமே கீழே விழுந்து உருண்டு விட்டாராம் ப்ரியாஆனந்த். அவரது கையில்கூட சின்னச்சின்ன சிராய்ப்பு ஏற்பட்டு விட்டதாம்.
 
அதையடுத்து, அவருக்கு உடனடியாக மருந்திட்டு ஓய்வு கொடுத்தார்களாம். அப்போது, சண்டைகாட்சி ஹீரோவுக்கும், வில்லனுக்கும் தானே என்னையும் எதுக்கு கூடவே அனுப்புறீங்க என்று டைரக்டரிடம் வாக்குவதம் செய்தாராம் ப்ரியா. அதன்காரணமாக, பாதி பைட் சீனுக்கு பிறகு அவரை அதர்வா கீழே இறக்கி விடுவது போன்று ஒரு ஷாட் எடுத்து விட்டு, ப்ரியாஆனந்துக்கு பைட் சீனில் இருந்து அவுட் கொடுத்தார்களாம்.

Friday, August 8, 2014

நினைத்ததை முடிக்கிறார் சித்தார்த்!!!

8th of August 2014
சென்னை:என்னதான் தெலுங்கு திரையுலகில் முக்கியமான நிலையான ஒரு இடத்தைப் பிடித்தாலும் நான் பிறந்த என் சொந்த ஊரான தமிழ்நாட்டில் என்னால் நல்ல ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை என்பது வேதனையாக இருக்கிறது” என்று சித்தார்த் சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியின்போது வருத்தத்துடன் சொன்னார்.. 
 
அதே உத்வேகத்துடன் களம் இறங்கினார். ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தில் தனக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு தமிழ்த்திரையுலகில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்த  சித்தார்த்துக்கு சுந்தர்சி.யின் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படம் நல்ல ரெஸ்பான்சை கொடுக்க, தற்போது வெளியான ‘ஜிகர்தண்டா’ அவரது தமிழ்க்கனவை நனவாக்கியிருக்கிறது என்றே சொல்லலாம்.
 
ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிகின்றன சித்தார்த்துக்கு.. அவரது குருநாதர்களான மணிரத்னமும் ஷங்கரும் பாராட்டித்தள்ளிவிட்டனர். அடுத்ததாக வசந்தபாலன் இயக்கத்தில் பிருத்விராஜூடன் இணைந்து நடித்துள்ள ‘காவியத்தலைவன்’ படம் வெளியானால் இன்னும் தனது கேரியர் சற்று உயர்ந்த நிலைக்கு செல்லும் என நம்புகிறார் சித்தார்த்..அதனால் முன்னைவிட இன்னும் முனைப்புடன் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் சித்தார்த்.. 
 
கடந்த செப்டம்பர் மாதம் கன்னடத்தில் வெளியாகி கன்னட திரையுலகையே வியப்பில் ஆழ்த்திய‘லூசியா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக நடிக்கிறார் சித்தர்த். இந்தப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குனரான பிரசாத் ராமர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
 
இனி தனது படங்கள் ஒரு குறிப்பிட்ட சீரான இடைவெளியில் வெளியாகும் என்கிறார் சித்தார்த் உறுதியாக. எப்படியோ தமிழில் நிலையான ஒரு இடத்தை தக்கவைக்க நினைத்த சித்தார்த், அதை கிட்டத்தட்ட அடைந்துவிட்டார் என்பதே உண்மை..

ஒரு பாட்டுக்கு ஆடுவது என் இமேஜை உயர்த்துமே தவிர ஒரு போதும் குறைக்காது: இனியா!!!

8th of August 2014
சென்னை:ஒரு பாட்டுக்கு ஆட வேண்டும் என்றால் இப்போது எல்லோரும் இனியாவைத்தான் தேடுகிறார்கள். ரிஷா, மைனா நாகு ஆகியோருக்கு போட்டியாக இனியாவும் குத்தாட்ட களத்தில் இறங்கி விட்டார். ரெண்டாவது படம், திரைக்கதை வசனம் இயக்கம், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களில் ஆட்டம் போட்டிருக்கிறார் இனியா கை வசம் இரண்டு படங்கள் வேறு இருக்கிறது. ஹீரோயின் வாய்ப்பு குறைந்து விட்டதால்தான் ஒரு பாட்டுக்கு ஆடிவருவதாக கூறப்படுவதை இனியா மறுக்கிறார்.
 
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: வேளச்சேரி படத்தில் சரத்குமார் சாருக்கு ஜோடியாக நடித்து வருகிறேன். இன்னும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சு நடந்து வருகிறது. மலையாளத்தில் மோகன்லால் சாருடன் நடித்து வருகிறேன். அப்படி இருக்கும்போது ஹீரோயின் வாய்ப்பு குறைந்ததால் ஆடுவதாகவும், பணத்துக்காக ஆடுவதாகவும் கூறுவது தவறு.
 
பார்த்திபன் சார் படத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஹீரோ, ஹீரோயின்கள் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள். நான் ஆடினது தப்பா?.ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் லட்சுமி மேனன் பாடிய பாட்டு ஸ்பெஷலாக இருந்ததால் ஆடுகிறேன். இப்படி ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ஒரு பாட்டுக்கு ஆடுவது என் இமேஜை உயர்த்துமே தவிர ஒரு போதும் குறைக்காது. என்கிறார் இனியா.

அமலாபால் மீண்டும் கணவர் இயக்கத்தில் நடிக்க வருகிறார்!!!

8th of August 2014
சென்னை:திருமணத்திற்கு பின் நடிக்க போவதில்லை என முடிவு செய்திருந்த அமலாபால், தனது கணவர் விஜய் இயக்கத்தில் மீண்டும் நடிப்பை தொடர முடிவு செய்துள்ளார்.

விஜய் இயக்கத்தில் தெய்வத் திருமகள், தலைவா படங்களில் நடித்த அமலாபால், அவருடன் ஏற்பட்ட காதலால் கடந்த மாதம் இயக்குஜர் விஜய்யை திருமணம் செய்த கொண்டார்.

திருமணத்திற்கு முன் அமலாபால் தனுஷூடன் ஜோடி சேர்ந்து நடித்த படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படம் அவரது திருமணத்திற்கு பிறகே ரிலீஸ் செய்யப்பட்டு, சூப்பர் ஹிட் ஆகி உள்ளது.

வேலையில்லாத பட்டதாரி படத்தின் வெற்றி, அமலாபாலுக்கு மீண்டும் நடிப்பாசையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அறிந்த விஜய்யும் தனது மனைவி மீண்டும் நடிக்க ஓகே கூறிவிட்டாராம்.

அதன் முதல் முயற்சியாக துபாயைச் சேர்ந்த நகைக்கடையின் விளம்பர தூதராக்கி, அந்த விளம்பர படத்தையும் விஜய்யே எடுக்கிறாராம்.
திருமணத்திற்கு பின் நடிக்க வந்திருக்கும் தான் நடிக்கும் விளம்பர படத்தையும் தனது கணவரே இயக்குவது தனக்கு இரட்டை சந்தோஷத்தை ஏற்படுத்தி இருப்பதாக அமலாபால் தெரிவித்துள்ளார்.
மேலும் வேலையில்லாத பட்டதாரி தனக்கு ஏகப்பட்ட பாராட்டுக்களை பெற்று தந்திருப்பதால், அது போன்ற வாய்ப்புக்கள் வந்தால் தான் நடிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

அஞ்சான்' சென்சார் பிரச்சனை முடிந்தது - 15ஆம் தேதி படம் ரிலீஸ்!!!

8th of August 2014
சென்னை:லிங்குசாமி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படம் 'அஞ்சான்'. சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை யுடிவி நிறுவனமும், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றது.


இப்படம் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே படத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடுவோம் என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்தது. இதையடுத்து படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 
இந்த நிலையில் படத்தை தணிக்கை செய்யும் பொது, படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளதால் படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்காது என்று கூறப்பட்டது. ஆனால், பெரிய பட்ஜெட் படம் என்பதால், எப்படியாவது படக்குழுவினர் யு சான்றிதழ் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், படம் அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், தற்பொது அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ள 'அஞ்சான்' படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்றதழ் வழங்க்கியுள்ளனர். படமும் சொன்னபடி, வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Sunday, August 3, 2014

விஞ்ஞானியாக மாறினார் பிரேம்ஜி அமரன்!!!

3rd of August 2014
சென்னை:நடிக்கும் படங்களில் எல்லாம் அழகான பொண்ணுகளை பிக்கப் பண்ண அலைவதும்(படத்தில் தான்) பின்னர் அவர்களை ஹீரோ தட்டிக்கொண்டு போய்விட பின்னணியில் 80களின் இளையராஜாவின் சோககீதம் ஒலிக்க சோகமே வடிவாக வரும் பிரேம்ஜியைத்தான் இதுவரை எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.

அண்ணன் இயக்கும் படங்களில் காமெடியனாக நடித்து வந்த பிரேம்ஜி, சோலோ ஹீரோவாக நடிக்கும் படம் மாங்கா. அவருக்கு ஜோடியாக அத்வைதா நடிக்கிறார். இவர்கள் தவிர லீமா, இளவரசு, ரேகா, ஆகியோரும் நடிக்கிறார்கள்.

பிரேம்ஜியை ஒரு விஞ்ஞானியாக கற்பனை பண்ணி பாருங்கள்.. உங்களை அறியாமலேயே சிரிப்பு வருகிறதல்லவா.. இதை திரையிலும் நீங்கள் பார்க்க தான் நடித்துவரும் ‘மாங்கா’ படத்தின் மூலம் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க இருக்கிறார் பிரேம்ஜி.

விஞ்ஞானி ஒருவர்  கண்டுபிடிக்கும் அதிசயங்கள் பல.. ஆனால் அப்படி அவர் கண்டுபிடிக்கும் பல விஷயங்கள், பலரது  பார்வையில் விநோதமாக தெரிகிறது. இதைவைத்து காமெடியாக கதை பின்னியிருக்கிறார் இயக்குனர் ராஜா. கதாநாயகியாக அத்வைதா நடிக்கிறார்.. படத்தின்  இசையும் பிரேம்ஜி தான். பாடல்களை கங்கைஅமரன், சினேகன் ஆகியோர் எழுதிருக்கிறார்கள். விரைவில் ஆர்யா ரிலீஸ் நடைபெற இருக்கிறது.

Saturday, August 2, 2014

சென்னையில் பிரம்மாண்ட அரங்கம்: பிரசாந்துடன் ‘சாகசம்’ செய்யும் நர்கிஸ் ஃபக்ரி!!!

2nd of August 2014
சென்னை:பிரசாந்த் நடிக்கும் ‘சாகசம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு ஐட்டம் சாங்கில் பிரசாந்துடன் பிரபல பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரி நடனம் ஆடுகிறார்.

ரண்பீர் கபூர் நடித்த ‘ராக்ஸ்டார்’ எனும் ஹிட் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நர்கிஸ் ஃபக்ரி. சமீபத்தில் வெளியான சல்மான்கானின் ‘கிக்’ படத்திலும் ’கிக்’ ஆன ஒரு ஐட்டம் சங்கில் ஆடியிருக்கிறார் நர்கிஸ். ‘சாகசம்’ படத்திற்காக பிரசாந்த் – நர்கிஸ் ஆடும் பாடல் காட்சியின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்து வருகிறது.

இந்தப் பாடல் காட்சியில் பிரசாந்த் - நர்கிஸுடன் 50 ரஷ்ய நடன அழகிகளும். 100 ஆண் நடன கலைஞர்களும் பங்கேற்று நடனம் ஆடுகிறார்கள். இதற்காக கலை இயக்குனர் மிலன் பிரம்மாண்ட அரங்கம் ஒன்றை அமைத்துள்ளார். இந்த அரங்கம் கண்ணைக் கவரும் விதம் பிரத்தியேக லைட்டிங்குகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

தமன் இசையில், மதன் கார்க்கி எழுதியுள்ள ’காரத்தில் காரத்தில் சில்லி…’ என்று வரும் பாடலுக்கு, ராஜு சுந்தரம் நடனம் அமைக்க, சௌந்தர் ஒளிப்பதிவில் படமாகி வருகிறது இந்த ஐட்டம் சாங்! இந்த ஐட்டம் சாங் தமிழ் சினிமா சரித்திரத்திலேயே பேசப்படும் பாடலாக அமையும் என்கின்றனர் ‘சாகசம்’ படக்குழுவினர்.

பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் எனபதை விரைவில் அறிவிக்க உள்ளனர் ‘சாகசம்’ டீம்!

தேவிஸ்ரீ பிரசாத்துக்கு இன்று பிநந்த நாள்!!!

2nd of August 2014  
சென்னை:தமிழில் ‘வில்லு’, ‘கந்தசாமி’, ‘சிங்கம்’ 'வீரம்' உட்பட பல படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் தேவிஸ்ரீ பிரசாத். தெலுங்கு பட உலகிலும் முன்னணி இசை அமைப்பாளராக விளங்கி வரும் இவர் ஒரு சில ஹிந்திப் படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார்.

சினிமாவுக்கு ஏராளமான ஹிட் பாடல்களை தந்துள்ள தேவிஸ்ரீபிரசாத், இசை அமைப்பாளர் என்றில்லாமல் சிறந்த பாடகர், டான்சர், நடிகர், படலாசிரியர் என சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர். சமீபத்தில் கூட வெளிநாடு ஒன்றில் நட்சத்திர கலை விழா நிகழ்ச்சி ஒன்றை வெற்றிகரமாக நடத்திவிட்டு வந்துள்ளார்.

அந்த உற்சாகத்தில் இருக்கும் தேவிஸ்ரீபிரசாத்துக்கு இன்று பிறந்த நாள்! அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்வதில் poonthalirkollywood சினிமா’ பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

ஒரு காட்சியில் நடித்தவர்கள் ஹீரோ-ஹீரோயின் ஆன கதை தெரியுமா..?!!!

2nd of August 2014 சென்னை:Tags : Thiruttu Kalyanam New Movie Photos, Thiruttu Kalyanam Latest Movie Gallery, Thiruttu Kalyanam Unseen Movie Pictures, Thiruttu Kalyanam Film Latest images, Thiruttu Kalyanam Movie Hot Stills, Thiruttu Kalyanam Movie New Pics.

விஜய் நடித்த ‘குருவி’ படத்தில் ஒரெ ஒரு காட்சியில் மட்டும் தலைகாட்டியவர்கள் தான் விதார்த்தும் விமலும். ‘புதுப்பேட்டை’ படத்தில் ஜஸ்ட் லைக் தட் வந்து போனவர் தான் விஜய்சேதுபதி. அவ்வளவு ஏன் நம்ம த்ரிஷாவே ‘ஜோடி’ படத்தில் சிம்ரனின் தோழியாக ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டும் நடித்தவர் தானே..

இன்றைக்கு இவர்களெல்லாம் டாப் ஹீரோ-ஹீரோயினாகி விட்டனர். அதனால் வாய்ப்பு என்பது யாருக்கு வேண்டுமானாலும் அமையலாம். ‘வழக்கு எண் 18/9’ படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே நடித்த ரங்காயாழி என்பவரையும் மூடர்கூடம் படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே வந்துபோன தேஜஸ்வீ என்பவரையும் ‘திருட்டுக்கல்யாணம்’ என்ற படத்தில் ஹீரோ-ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு தேடிவந்திருப்பதும் இப்படித்தான். இந்தப்படத்தில் ‘ஆடுகளம்’ நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் ஷக்திவேலன். இவர் கே.பாக்யராஜ், சசி போன்றவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவிடம் உதவியாளராக வேலைபார்த்த கார்த்திக் நல்லமுத்து தான் கேமராமேன். திருட்டுக்கல்யாணம் பண்ணிக்கிறமா?

திருக்கல்யாணம் பண்ணிக்கிறமா? என்பது முக்கியமல்ல.. கல்யாணம் பண்ணிகிறதும் சந்தோஷமா வாழ்றதும் தான் முக்கியம் என்ற கருத்தை மையமாக வைத்துதான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அஜீத்தின் 55வது படத்தில் படத்தில் இணைந்தும் சேர்ந்து நடிக்காத த்ரிஷா-அனுஷ்கா!!!

2nd of August 2014 சென்னை:சினிமாவில் பெரும்பாலும் சிங்கிள் ஹீரோயின் கதைகளிலேயே அதிகமாக நடித்திருக்கிறார் த்ரிஷா. அப்படியே சில படங்களில் மற்ற நடிகைகளுடன் நடித்திருந்தாலும் அதில் இவர்தான் முக்கிய நாயகியாக இருந்திருக்கிறார்.

அதேபோல் அனுஷ்காவும் தெய்வத்திருமகள் உள்ளிட்ட சில படங்களில் மற்ற நடிகைகளுடன் சேர்ந்து நடித்தபோதும், அவருக்கே முக்கிய நாயகி வேடங்கள் கொடுக்கப்பட்டு வந்துள்ளன.

இந்தநிலையில், தற்போது அஜீத்தின் 55வது படத்தில் இவர்கள் இருவருமே இணைந்துள்ளனர். அப்படியென்றால் யாருக்கு கதையில் முக்கியத்துவம் என்று கேட்டால், இரண்டு பேருக்குமே சரிசமமான வேடங்களே கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். புலனாய்வு அதிகாரியாக நடித்திருக்கும் சால்ட் அண்ட் பெப்பர் அஜீத்துக்கு ஜோடி அனுஷ்கா நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஒரு டூயட் உள்ளது.

அதேபோல் இளவட்ட அஜீத்துக்கு ஜோடியாக அதாவது ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் த்ரிஷாவுக்கும் ஒரு டூயட் பாடல் உள்ளது. அது மட்டுமின்றி, கதையில் இருவருக்குமே சமபங்கு இருப்பதோடு, காட்சிகள்கூட கிட்டத்தட்ட ஒரே அளவாகத்தான இருக்கும் என்கிறார்கள்.

இதற்கெல்லாம் மேலாக, த்ரிஷாவின் கேரக்டர் ப்ளாஷ்பேக்கில் வந்து செல்வதால், அவர்கள் இருவரும் ஒரு காட்சியில்கூட சேர்ந்து நடிக்கவில்லையாம். அதனால் இதுவரை படப்பிடிப்பில்கூட அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டதில்லையாம்.

Friday, August 1, 2014

Actor Atharva Six Pack Photos!!! இந்தி நடிகர்களை பார்த்து தமிழ் நடிகர்களுக்கும் சிக்ஸ்பேக் வைத்துக் கொள்ளும் மோகம்!!!

31st of July 2014
சென்னை:Tags : Actor Atharva New Stills, Atharva Smart Pictures, Atharva Gym Body images, Atharva Cute Look Photos, Atharva Unseen Gallery, Atharva Smart Pics, Atharva Latest Photo Shoot..
இந்தி நடிகர்களை பார்த்து தமிழ் நடிகர்களுக்கும் சிக்ஸ்பேக் வைத்துக் கொள்ளும் மோகம் வந்தது. முதன் முறையாக சூர்யா வைத்தார். அதன் பிறகு விஷால், சிம்பு, தனுஷ் என்று வரிசையாக வைக்க ஆரம்பித்தார்கள். தற்போது அதர்வாவும் சிக்ஸ் பேக் கிளப்பில் சேர்ந்திருக்கிறார்.


அவர் தற்போது நடித்து வரும் ஈட்டி படத்தில் தடகள வீரராக நடிக்கிறார். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டம் ஆகியவற்றில் சிறந்த இளைஞராக நடிக்கிறார். இதற்காக அவர் ஒரு வருடமாக டயட்டில் இருந்து கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து சிக்ஸ் பேக் கொண்டு வந்திருக்கிறார். அந்த படங்களை தற்போது வெளியிட்டிருக்கிறார்.
இதுபற்றி அதர்வா கூறியிருப்பதாவது தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள வரும் ஒருவன், இங்கு எதிர்பாராத பிரச்சினை ஒன்றை சந்திக்கிறான். அதிலிருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான் என்கிற கதை. இதனால் ஒரு ஸ்போர்ட்ஸ்மேனுக்குரிய பாடிலாங்குவேஜை கொண்டு வரத்தான் இந்த முயற்சி.
கடந்த ஒரு வருடமாக கடுமையான பயிற்சியும், உணவு கட்டுப்பாடும் கடைபிடித்து கொண்டு வந்திருக்கிறேன். சிக்ஸ் பேக் கொண்டு வர ஒரு ஆண்டு வேண்டும். அதை கலைக்க ஒரு நாள் போதும். தொடர்ந்து சிக்ஸ் பேக்கை தொடர இருக்கிறேன். இது தவிர படத்துக்காக எல்லா தடகள விளையாட்டு போட்டியிலும் பயிற்சி பெற்றிருக்கிறேன் என்கிறார் அதர்வா.