.

.

Monday, December 29, 2014

Simbu Sings for Movie Saahasam!!!பிரஷாந்தின் சாஹசம் படத்திற்காக பின்னணி பாடிய சிம்பு!!!

29th of December 2014
சென்னை:The young Turk Simbu crooned the lines written by Karky Vairamuthu *DESI DESI GIRL* for a very special item song of Prashanth with Bollywood actress NargisFakhri & has joined the bandwagon of India's best singers like, teeny boppers heart throb-Anirudh, Shreya Ghoshal, Shankar Mahadevan, Mohit Chauhan, Arjit Singh, Andrea. Earlier the female version was sung by Actor Lakshmi Menon, with this the Album is complete & the Audio launch of movie *SAAHASAM* is planned on a massive scale. The singers of *SAAHASAM*  

Anirudh, Silambarasan, Shankar Mahadevan, Shreya Ghoshal, Mohit Chauhan, Honey Singh, Haricharan, Lakshmi Menon, Andrea & others will perform live on the grand Audio function. The expectation of *SAAHASAM* songs are so high & Actor Thiagarajan is so excited about the outcome of the Music as Thaman has scored outstanding - five seductive foot tapping scintillating numbers. Shankar Mahadevan & Shreya Ghoshal has sung *Pudikkum Pudikkum* Song penned by Kabilan. Lyrics: Karky Vairamuthu, Na.Muthukumar, Kabilan & Yugabharathi.

பிரஷாந்தின் சாஹசம் படத்திற்காக, முன்னணி நடிகரான சிம்பு (எ) சிலம்பரசன் பின்னணி பாடியுள்ளார். இந்த பாடல், இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தமன், சாஹசம் படத்திற்காக கடினமாக உழைத்து ஐந்து அற்புதமான பாடல்களை பதிவு செய்துள்ளதாகவும், இது பிரஷாந்தின் சாஹசம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பக்க பலமாக இருக்கும் என்றும் இசையமைப்பாளர் தமனை தியாகராஜன் பாராட்டினார். 
 
தமன் இசையமைத்த 5 பாடல்களிலும் எது சிறந்த பாடல் என முடிவு செய்வது சிரமமான விஷயம் என ஆச்சரியத்துடன் கூறினார் தியாகராஜன்.
பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

Saturday, December 27, 2014

ஏலத்துக்கு வருகிறது நடிகர் ரஜினி மனைவி சொத்து!!!

27th of December 2014
சென்னை:நடிகர் ரஜினி நடித்த, 'கோச்சடையான்' படத் தயாரிப்புக்காக வாங்கிய கடனை, 'மீடியா ஒன்' நிறுவனம் திருப்பிச் செலுத்தாததால், அதற்கு பிணையாகக் கொடுக்கப்பட்ட, நடிகர் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்தின், 22 கோடி ரூபாய் சொத்தை கையகப்படுத்த, இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கியான, 'எக்சிம்' நடவடிக்கை எடுத்துள்ளது.

ரஜினி, தீபிகா படுகோனே உட்பட பலர் நடித்த, 'கோச்சடையான்' திரைப்படம், மே, 23ம் தேதி வெளியானது. நாட்டிலேயே முதல் முறையாக முப்பரிமாண முறையில் (3டி), 'மோஷன் காப்சரிங்' என்ற புதிய தொழில்நுட்பத்தில் இப்படம் தயாரிக்கப்பட்டது. ரஜினியின் மகள் சவுந்தர்யா அஸ்வின் இயக்கிய இப்படத்தை, 'ஈராஸ்' நிறுவனத்துடன் இணைந்து, 'மீடியா ஒன் குளோபல் என்டர் டெயின்மென்ட்' நிறுவனம் தயாரித்தது.
கடன்:

மிகுந்த பொருட்செலவில் உருவான இந்த படத்தின் தயாரிப்பு செலவுகளுக்காக, 'மீடியா ஒன்' நிறுவனம், 'எக்சிம்' வங்கியிடம், 20 கோடி ரூபாய் கடனாக பெற்றதாக தெரிகிறது.இந்த கடனை பெறும் போது, ரஜினியின் மனைவி லதா ரஜினியின் பெயரில், சென்னை, பல்லாவரத்தை அடுத்த திருமுடிவாக்கத்தில் உள்ள சொத்தின் ஆவணங்கள் உத்தரவாதமாகக் கொடுக்கப்பட்டது. ஆனால், 'கோச்சடையான்' படம் வெளியாகி விட்ட பின், 'எக்சிம்' வங்கியில் வாங்கிய கடனை, 'மீடியா ஒன்' நிறுவனம் உரிய காலத்தில் செலுத்தவில்லை.இதனால், அந்த கடனுக்கு உத்தரவாதமாகக் கொடுக்கப்பட்ட ஆவணங்களுக்கு உரிய லதா ரஜினியின் சொத்தை உடைமையாக்கிக் கொள்ள, 'எக்சிம்' வங்கி முடிவு செய்தது.
அறிவிப்பு:

இது தொடர்பாக அந்த வங்கி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:'மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் கடன் கணக்கில், 2014 ஜூலை, 17ம் தேதி நிலவரப்படி, 22 கோடியே, 21 லட்சத்து, 85 ஆயிரத்து, 865 ரூபாய் வசூலாக வேண்டியுள்ளது. உரிய காலத்தில் இத்தொகை வசூலாகாததால், இதற்கு பிணையாகக் காட்டப்பட்ட, லதா ரஜினியின் பெயரில் உள்ள சொத்தை, வங்கியின் உடைமையாக்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது.கடந்த, 2002ல் பிறப்பிக்கப்பட்ட பிணைய பத்திரங்கள் மீதான, எட்டாவது வட்டி விதிகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தடை:

இதன்படி, இதில் பிணையமாக அளிக்கப்பட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, சென்னை, பல்லாவரத்தை அடுத்த திருமுடிவாக்கத்தில் சர்வே எண்: 237/3க்கு உட்பட்ட, 26 சென்ட், சர்வே எண்: 237/4க்கு உட்பட்ட, 37 சென்ட், சர்வே எண்: 236/2க்கு உட்பட்ட, 1.50 ஏக்கர் என மொத்தம், 2.13 ஏக்கர் நிலத்தை உடைமையாக்குவதற்கான, 'நோட்டீஸ்' பொது அறிவிப்பாக வெளியிடப்படுகிறது. எனவே, இச்சொத்தை அதன் உரிமையாளரான லதா ரஜினிகாந்த் அல்லது வேறு யாரும் விற்பது, வாங்குவது தொடர்பான எந்த நடவடிக்கையிலும் வங்கியின் கவனத்துக்கு வராமல் ஈடுபடுவது தடை செய்யப்படுகிறது.இவ்வாறு அந்த அறிவிப்பில், 'எக்சிம்' வங்கி தெரிவித்துள்ளது.
அடுத்தது என்ன?

இந்த அறிவிப்பின் படி, 'மீடியா ஒன்' நிறுவனம் கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால், உடைமையாக்கப்படும் சொத்தை பொது ஏலத்துக்கு விட்டு, நிலுவைத் தொகையை மீட்க வங்கி நடவடிக்கை எடுக்கும்.
'மீடியா ஒன்' நிறுவனம் விளக்கம்:

இதுகுறித்து, மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:'எக்சிம்' வங்கியிடம் எங்கள் நிறுவனத்தின் திருப்பிச் செலுத்தும் திறன் அடிப்படையிலேயே, 20 கோடி ரூபாய் கடன் வாங்கினோம்.இந்த தொகையை, 2015 மார்ச், 31ம் தேதிக்குள் திருப்பி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுடன் பேசி இருக்கிறோம். எனவே, இந்த கடனை நாங்களே திருப்பி செலுத்த ஏற்பாடு செய்து வருவதால் உத்தரவாதம் அளித்த லதா ரஜினிகாந்த், தேவேந்தர் ஆகியோரை வங்கி அணுக வேண்டிஇருக்காது.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த மாற்றங்கள்...:

'மீடியா ஒன்' நிறுவனத்தின் கடனுக்காக உடைமையாக்கப்படும் இந்த சொத்து தொடர்பாக, இதுவரை நடந்த பரிமாற்றங்கள் குறித்து பதிவுத்துறை வாயிலாக தெரிய வந்த விவரங்கள்:
 
*கடந்த, 2006 ஆகஸ்டில், இந்த நிலங்களை லோகம்மன், ரவி, வேலு, ராஜேஸ்வரி, லதா, கவிதா, பிரேமா, கண்ணன் ஆகியோரிடமிருந்து, லதா ரஜினிகாந்த், ரேணுகா ரவிசங்கர் பெயருக்கு மாற்றப்பட்டது.
 
* இந்த நிலங்கள், லதா ரஜினிகாந்த் பெயரில் இருந்து இந்தியன் வங்கி பெயருக்கு ஒரு கடனுக்காக, 2007ல் மாற்றப்பட்டது.
 
*கடந்த, 2011ல் இந்தியன் வங்கியிடமிருந்து இதற்கான ஆவணம், லதா ரஜினியின் பெயருக்கே வருகிறது.
 
* இதன் பின், 2011ல் லதா ரஜினி பெயரில் இருந்து, 'மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட்' நிறுவனத்தின் பெயருக்கு ஆவண ஒப்படைப்பாக மாறுகிறது.
 
*இதில், 'மீடியா ஒன்' நிறுவனம் கடனை செலுத்தாததால், இந்த சொத்து, 'எக்சிம்' வங்கியின் உடைமையாகிறது.

Wednesday, December 17, 2014

2015-ம் ஆண்டின் முதல் விடியலுக்காக ஆவலுடன் காத்திருக்கும் ஹன்சிகா!!!

17th of December 2014
சென்னை:அரண்மனை’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றி தந்த தன்னைம்பிக்கையுடன் அவர் கூறியதாவது:
 
அரண்மனை’ திரை உலகில் எனக்கு ஒரு விசாலமான இடத்தை தந்துள்ளது. என்னுடைய திறமை மேல் நம்பிக்கைக் கொண்டு அந்த பிரமாதமான கதாபாத்திரத்தை சுந்தர்.சி சார் எனக்கு அளித்ததற்கு நான் கொடுத்து வைத்து இருக்க  வேண்டும்' அவர் தொடர்ந்து தன்னுடைய படங்களில், வித்தியாசமான கதாபாத்திரங்கள் எனக்கு வழங்கி வருகிறார்.

பொங்கல் அன்று வெளிவரும் 'ஆம்பள' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து உள்ளேன். நட்சத்திர அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள இந்த படம் ஏற்ற படமாக இருக்கும்.

டிசம்பரில் வெளிவர இருக்கும் 'மீகாமன்' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இந்த படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையான படமாக இருக்கும். அடுத்து வெளிவரும் 'உயிரே' படத்தில் என்னுடைய வயதுக்கு உகந்த கதாபாத்திரத்தில நடித்து உள்ளேன்.

அடுத்து நான் மிகவும் எதிர்பார்க்கும் 'வாலு' எனக்கு மிக பொருத்தமான படமாகும். மிகவும் துடிப்பான வலிமையான பாத்திரம். இதற்கெல்லாம் மேலே விஜய் சாருடன், சிம்பு தேவன் இயக்கத்தில் நடிக்கும் பிரம்மாண்டமான படைப்பு. இந்த படத்தில் நான் இளவரசியாக நடிக்கிறேன். படப்பிடிப்பில் நான் இளவரசியாக தான் உணர்கிறேன்.

சிலர் எனக்கு அதிர்ஷ்டம் என்கின்றனர். கடின உழைப்புடன் விடாமுயற்சி இருந்தால் வெற்றி கிட்டும். என்ன நடந்தாலும், நான் என் கடமையில் கண்ணாக இருப்பேன்’ என்றார்.

வருகிற 2015 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்? ஆருடங்களுக்கும் ஆசிர்வாதங்களுக்கும் அப்பாற்பட்டு ஹன்சிகாவுக்கு அது பொன்மயமாக தான் இருக்கும் என்கின்றனர் திரை துறையினர். தனது வசீகரத்தால் இளைய உள்ளங்களையும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை மூலம் எல்லோருடைய அன்பையும் பெற்ற ஹன்சிகா 2015 ஆம் ஆண்டின் முதல் விடியலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.

Saturday, December 13, 2014

'உலக சூப்பர் ஸ்டார்' ரஜினி பிறந்த நாள், லிங்கா ரிலீஸ்; ரசிகர்கள் கொண்டாட்டம்!!!

13th of December 2014
சென்னை: இன்று டிசம்பர் 12-ம் தேதி 'உலக சூப்பர் ஸ்டார்' என ரசிகர்கள் கொண்டாடும் ரஜினியின் பிறந்த நாள்.

அவர் நடித்த மெகா படமான லிங்காவின் வெளியீட்டு நாளும் அதுவே. எனவே ரஜினி ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.
இரட்டை சந்தோஷமல்லவா! அவர்களின் இந்த சந்தோஷம் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு வருகிறது, கடந்த சில வாரங்களாக.

ரஜினி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும், லிங்கா பெரும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் எனப் பிரார்த்தித்து ரசிகர்கள் பல்வேறு பிரார்த்தனைகள், தங்கத் தேர் இழுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களைச் செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் அத்தகனை பெரிய கோயில்களிலும் நேற்று மாலையும் இன்றும் தங்கத் தேர் இழுப்பு வைபவம் ரஜினி ரசிகர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக ரஜினி ரசிகர்களால் உதவிகள் பெற்றோர் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டும்.

அன்னதானம், இலவச உடைகள், இலவச கல்வி உபகரணங்கள், இலவச மருத்துவ உதவிகள், ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்பு தாணம், நிதியுதவி... என தொடர்ந்து செய்து வருகின்றனர்.
ரஜினியின் அனைத்து மன்றங்களும் உலகெங்கும் இதனைச் செய்து வருகின்றனர். வெறுமனே கேக் வெட்டுவது, பட்டாசு வெடிப்பது என்றில்லாமல், முழுக்க முழுக்க மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

லிங்கா ரிலீஸைப் பொறுத்தவரை, அதனை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். படம் வெளியாகும் அத்தனை அரங்குகளும் மக்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன என்றால் மிகையல்ல.
நேற்று நள்ளிரவிலிருந்து லிங்கா சிறப்புக் காட்சிகள் நடை பெறுகின்றன. சென்னைக்கு கொஞ்சமும் சளைக்காத வகையில் தமிழகத்தின் பிற பகுதிகளிலும், உலகின் மற்ற நாடுகளிலும் லிங்கா வெளியீட்டை விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

Thursday, December 11, 2014

தமிழகத்தில் 700 தியேட்டர்களில் லிங்கா படம் நாளை ரிலீஸ்!!!

11th of December 2014
சென்னை:லிங்கா’ படம் நாளை ரிலீசாகிறது. இப்படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருக்கிறார்.

‘லிங்கா’ படத்துக்கு எதிராக சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. லிங்கா கதை தங்களுடையது என்று வழக்கு தொடர்ந்தவர்கள் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்.

ஆனால் ‘லிங்கா’ படத்துக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்து விட்டது. இதையடுத்து உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் ‘லிங்கா’ நாளை வெளியாகிறது. தமிழ் நாட்டில் மட்டும் 700–க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. டிக்கெட் முன்பதிவுகள் நேற்று நடந்தன. சிறிது நேரத்திலேயே அனைத்து தியேட்டர்களிலும் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறும் போது, டிசம்பர் மாதம் பொதுவாக தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரத்து மந்தமாகவே இருக்கும். இந்த சமயத்தில் ‘லிங்கா’ படம் வருவது திரையரங்கு உரிமையாளர்களுக்கு வரப்பிரசாதமாகும். ஒரு வாரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. அனைத்து தியேட்டர்களும் நாளை முதல் நிரம்பி வழியப்போகிறது. தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறோம் என்றார்.

உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் ‘லிங்கா’ வருகிறது. அமெரிக்காவில் 328 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

சென்னையில் சத்யம், சாந்தம், செரீன், சிசன், தேவி, தேவி பாரடைஸ், தேவிகலா, தேவிபாலா, எஸ்கேப், வினஸ், ஸ்ப்ரிக், ஸ்பாட் வேவ், உட்லண்ட்ஸ், சிம்பொனி, ஐநாக்ஸ், ஸ்கிரீன், சாந்தி, சாய்சாந்தி, ஆல்பட், பேபி ஆல்பட், அபிராமி, ஸ்வர்ணசக்தி, அபிராமி, அன்னை அபிராமி, பால அபிராமி, சங்கம், பத்மம், ரூபம், பி.வி.ஆர்., எஸ் 2 பெரம்பூர், கமலா, உதயம், சூரியன், சந்திரன், ஐ.டிரீம்ஸ், மகாராணி, பாரத், சைதைராஜ் போன்ற தியேட்டர்களில் ‘லிங்கா’ படம் திரையிடப்படுகிறது.

காசி தியேட்டரில் நள்ளிரவு 12 மணிக்கு ரஜினி ரசிகர்கள் சைதை ஜி.ரவி தலைமையில் ரஜினி பிறந்த நாள் ‘கேக்‘ வெட்டுகின்றனர். சென்னை மாவட்ட ரஜினி ரசிகர்மன்ற நிர்வாகிகள் ராமதாஸ், சூர்யா, ரவி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தியேட்டர்கள் விழாக் கோலம் பூண்டுள்ளது. அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் ரஜினி கட்அவுட்கள் வைத்துள்ளனர். கொடி தோரணங்களும் கட்டப்பட்டு உள்ளது. பேனர்களும் வைத்துள்ளனர்.

நடிகர், நடிகைகள் பலர் சிறப்பு காட்சியில் ‘லிங்கா’ படம் பார்க்க தயாராகிறார்கள். நடிகர் தனுஷ் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி விட்டு ‘லிங்கா’ படம் பார்க்க சென்னை வந்துள்ளார்.

முத்தம் என்பது அந்தரங்கமான விஷயம்: நடிகை ஷோபனா!!!

11th of December 2014
சென்னை:முத்தம் என்பது அந்தரங்கமான விஷயம் என்று கூறிய நடிகை ஷோபனா, முத்தப் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷோபனா, செய்தியாளர்களிடம் கூறும் போது, “இதனை ஏன் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு அந்தரங்கமான விவகாரம், அந்தரங்கமான விஷயமாகும்.
 
இப்போது இது சரியென நீங்கள் கூறலாம், ஆனாலும், உங்கள் இருதயத்தின் அடியாழத்தில் உங்கள் மகள் இதனைச் செய்வதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்” என்றார்.
 
டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறும் இவரது பரதநாட்டிய புதிய நிகழ்ச்சியை அறிவிக்க ஷோபனா பெங்களூரு வந்தார். "கிஸ் ஆஃப் லவ்" பற்றி அவர் மேலும் கூறும் போது, மக்கள் இந்தப் போராட்டம் பற்றிய உண்மையான கருத்துகளைக் கூற தயங்குகிறார்கள், காரணம் அவர்கள் கூற்று திசைத்திருப்பபடலாம் அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் என்று அஞ்சுகின்றனர் என்றார்.

Wednesday, December 10, 2014

'லிங்கா' படத்துல மூணு ஆச்சர்யங்கள் இருக்கு: சொல்கிறார் ரஜினி!!!

10th of December 2014
சென்னை:லிங்கா படத்தின் தெலுங்குப்பதிப்பு புரமோஷன் நிகழ்ச்சி நேற்று (08.12.2014) அன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
தெலுங்குப்பட முன்னணி இயக்குநர்கள் கே.விஸ்வநாத், த்ரிவிக்ரம் சீனிவாஸ், தயாரிப்பாளர்கள் அல்லுஅரவிந்த், ரமேஷ் பிரசாத், தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு உட்பட தெலுங்குப்படத்துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் லிங்கா படத்தின் கலைஞர்களான ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, இயக்குநர் கே.எஸ்ரவிகுமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், முனி ரத்னா ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, கதாசிரியர் பொன் குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

லிங்கா விழாவில் ரஜினி உரையாற்றினார்:

புயலால பாதிக்கப்பட்ட விசாகப்பட்டிணம் மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். சில நாளுக்கு முன்னாடி நடந்த நிவாரணநிதியுதவி நிகழ்ச்சிக்கு என்னாலவரமுடியலை.அப்பஎங்க குடும்பத்துல நடந்த ஒரு முக்கிய நிகழ்ச்சியால வர முடியாமப்போயிடுச்சி.அதுக்காக நீங்க எல்லாரும் என்னை மன்னிக்கணும்.சென்னைக்குப்போன பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்னோட நிதியுதவியை வழங்கறேன்.
சுமார் நான்கு வருடங்கள் கழிச்சி நான் நடிச்சிருக்கிற ‘லிங்கா’ படம் வெளிவரப்போகுது. நடுவுல வந்த ‘கோச்சடையான்’ படம் அனிமேட்டட் படம், நேரடியா நான் நடிச்சி வர்ற படம் ‘லிங்கா’.

ஒரு ஆறு மாசத்துக்குள்ள இந்த மாதிரியான ஒரு மிகப்பெரிய படத்தைக்கொடுக்கிறது நடக்க முடியாத ஒரு விஷயம்.பெரிய நட்சத்திரங்கள், மிகப்பெரிய டெக்னீஷயன்கள் பங்கு பெற்றிருக்கிற படம் கறஅர்த்தம்இல்லை.இந்தப்படத்தோட கதை பெருசு, இந்தப்படத்தோட பின்னணி பெருசு. சுதந்திரத்துக்கு முன்னாடி 40கள்ல நடக்கிற கதை.இப்போ நடக்கிற கதை.

ஒரு மிகப்பெரிய அணைகட்டறதைப் பத்தின கதை, டிரெயின் சண்டைக்காட்சிகள், யானைகள், குதிரைகள், ஒரு 60, 70 சீன் படத்துல இருந்தால், அதுல 40 சீன்ல 1000 பேராவது நடிச்சிருப்பாங்க. இவ்வளவு கஷ்டத்தோட குறிப்பிட்ட காலத்துக்குள்ள இந்தப்படத்தை முடிச்சிருக்கோம்னா இயக்குநர் ரவிகுமார், அவரோட யூனிட்மற்றும் தயரிப்பாளர் ஆகியோர் தான் காரணம். அதுக்கு நடிகர்கள் காரணம் இல்லை. ஏன்னா, நாங்க கடைசில வந்து ஷுட்டிங் முடிஞ்சதும் சீக்கிரம் போயிடுவோம்.ஆனால், டெக்னீஷியன்ஸ் தான் ரொம்பகஷ்டப்பட்டாங்க.
இந்தப்படத்துல மூணு ஆச்சர்யங்கள் இருக்கு.முதல் ஆச்சர்யம் டெக்னீஷியன்கள்.ஏ.ஆர்.ரகுமான், ரத்தினவேலு, சாபுசிரில், அனுஷ்கா, சோனாக்ஷி, அவ்வளவு பேருமே ரொம்ப பிஸியானவங்க. அது படம் பார்க்கும் போது உங்களுக்குத்தெரியும்.

இரண்டாவது ஆச்சர்யம். இந்தப்படத்தோட கதை என்னோடதுன்னு சில பேர் வழக்கு போட்டிருக்காங்க. டிவிட்டர்ல ஒண்ணுபடிச்சேன்.ரஜினி படத்துல கதை இருக்கா, அப்படி அவரோட படத்துல கதை இருந்தால் ,அதை நாலு பேரு அவங்ககதைன்னு சொன்னாங்கன்னா, நான் போய் அந்தப்படத்தை முதல்ல பார்க்கிறன்னு ஒருத்தர் எழுதியிருந்தாரு. உண்மையிலேயே இந்தப்படத்துல மிகச்சிறப்பான கதை இருக்கு.அந்த நாலு பேரோட கதை இல்லை இது, இந்தப்படத்தோட கதை பொன் குமரனுடையது.எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சகதை, இதை மாதிரி ஒரு கதையில நான் நடிச்சது எனக்குக்கிடைச்ச பாக்கியம்.
மூணாவது ஆச்சர்யம் என்னன்னா…நான் இந்தப்படத்துல ரொம்பக்கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன். அது வந்து சண்டைக்காட்சிகள்ல நடிச்சது கிடையாது. டிரெயின் சண்டை, கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி அதெல்லாம் கூட கிடையாது. இங்க இருக்கிறவங்களோட டூயட் பாடினது தான் அந்தக்கஷ்டம்.

கேமராமேன் ரத்தினவேலு கூட வெளிப்படையா சொல்லியிருந்தாரு.நான் ரஜினிகாந்தை ரொம்பக் கஷ்டப்பட்டு இளமையா காட்டியிருக்கேன்னு சென்னையில நடந்த இசை விழால சொன்னாரு.நான் சினிமாவுக்கு வந்து 40 வருஷம் கிட்ட ஆகிடுச்சி.

ஒரு சீனியர் நடிகரா சினிமாவுக்கு என்ன தர்றீங்கன்னு கேட்டால், குறுகிய காலத்துல இந்த மாதிரி ஒரு படத்தைத் தயாரிச்சிக்கொடுத்திருக்கோம்னு சொல்வேன்.ஹாலிவுட்ல கூட பெரிய பெரிய படங்கள் வருது.அங்கெல்லாம் ஒரு படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பல மாதங்கள் எடுத்துப்பாங்க. ஆனால், ஷுட்டிங் போயிட்டால் நாலஞ்சி மாசங்கள்ல அதை முடிச்சிடுவாங்க. அதை இங்கயும் சொல்லலாம்.

ஆனால், ‘பாகுபலி’ வேற மாதிரியான படம். அது இரண்டு பாகம் எடுக்கிற படம், அதை நான் பார்த்திருக்கேன், அது வேற படம்.இயக்குனர் ராஜமௌலிக்கு என்னோட பாராட்டுக்கள்.அவர் இந்தியாவின் நம்பர் 1 இயக்குனரா வருவாரு.தெலுங்குமக்கள் எல்லாருக்கும் அந்தப்படம் மிகப்பெரிய கௌரவம்.நான் வெளிப்படையா சொல்றேன், ராஜமௌலி படத்துல நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சால் நான் கண்டிப்பா நடிப்பேன்.ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ரவிகுமார் இந்தப்படத்தை ரொம்ப அழகா எடுத்திருக்காரு.ரத்தினவேலு ரொம்ப சீக்கிரமா இந்தப்படத்தை எடுக்கக்காரணமா இருந்தாரு. அனுஷ்கா, சோனாக்ஷி, அப்புறம் ஜெகபதி பாபு. திரையுலகில இருக்கிற ஒரு ஜென்டில்மேன்.அவரோட நட்பு வாழ்க்கை முழுவதும் தொடரணும்னு ஆசைப்படறேன். இந்தப்படம் உங்க எல்லாருக்கும் கண்டிப்பாப் பிடிக்கும்.

தமிழ் மக்கள் என் படத்தைப்பார்த்து எனக்கு எப்படி ஆதரவு தர்றாங்களோ, அதே மாதிரி தெலுங்கு மக்களும் எனக்கு ஆதரவு தர்றாங்க. இந்தப்படத்துக்கும் அதே மாதிரி ஆதரவு தருவாங்கன்னு நம்புறேன்.தயாரிப்பளார் அல்லு அரவிந்த், அடுத்தபடம் எப்பன்னு கேட்டாரு, கதை இன்னும் ரெடியாகலைன்னு சொன்னேன்.முதல்ல சிரஞ்சீக்கு நல்ல கதையைக் கொடுங்க. ரொம்ப நாளா அவர் காத்திட்டிருக்காரு.இந்தப்படம் நல்ல வெற்றியைப் பெறும்னு நம்பறேன். நன்றி” என முடித்தார் ரஜினி.

Sunday, December 7, 2014

அனுஷ்காவுக்கும், அஞ்சலிக்கும் இடையே மோதல்!!!

7th of December 2014
சென்னை:குடும்ப பிரச்சனை காரணமாக தமிழ் சினிமாவில் இருந்து விலகி ஆந்திரா பக்கம் போன அஞ்சலி, தற்போது அங்கு அனுஷ்காவுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடி
கையாக உள்ள அனுஷ்கா, இரண்டு மாபெரும் பட்ஜெட்டில் உருவாகும் படங்களுடன், அஜித்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். மேலும், ரஜினிக்கு ஜோடியாக அவர் நடித்ட லிங்கா படமும் 12ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், தெலுங்கு தயாரிப்பாளர்களிடம் அனுஷ்காவுக்கு வயதாகிவிட்டது. அவர் அனைத்து வேடத்திற்கும் பொருந்த மாட்டார். எனவே அந்த வாய்ப்புகளை எனக்கு தாருங்கள், என்று அஞ்சலி கேட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதனால், அஞ்சலிக்கும், அனுஷ்காவும் இடையீ பனி போர் மூண்டுள்ளது. இந்த பனி போர், விரைவில் பெரிய அளவில் வெடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Tuesday, December 2, 2014

நடிகை லிஸ்ஸி, இயக்குனர் பிரியதர்ஷன் விவாகரத்து!!!

2nd of December 2014
சென்னை:கணவன் மனைவியான நடிகை லிஸ்ஸியும், இயக்குனர் பிரியதர்ஷனும் விவாகரத்து கேட்டு, குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த்துள்ளனர்.

மலையாள நடிகையான லிஸ்ஸி, தமிழ் மற்றும் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவரும் இயக்குனர் பிரியதர்ஷனும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளன. திருமணமாகி 24 ஆண்டுகள் ஆனா, இந்த தம்பதியர் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து நடிகை லிஸ்ஸி கூறுகையில், “24 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு நானும், பிரியதர்ஷன் அவர்களும் முழு மனதுடன் பிரிய முடிவெடுத்துள்ளோம் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் பிரிவை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி விண்ணப்பித்துள்ளேன். எங்களது இந்த முடிவை எங்களின் குழந்தைகளும், நண்பர்களூம் அறிவார்கள்.

இந்த கடினமான காலத்தில் தாங்கள் அனைவரும் எங்களின் கவலை அறிந்து, எங்களின் தனியுரிமை மதித்து செயல்படுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Sunday, November 30, 2014

கத்தி பட வழக்கில் ஐகோர்ட் விளாசல்: திரைப்படங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் அரசு பாதுகாப்பு வழங்கவேண்டும்!!!

30th of November 2014
சென்னை:நடிகர் விஜய் நடித்த, 'கத்தி' படத்தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை, படத்திலும், விளம்பரங்களிலும் வைத்துக் கொள்ள, பாதுகாப்பு வழங்கும்படி, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, தி.நகரில் உள்ள, லைகா தயாரிப்பு நிறுவனம், 'கத்தி' படத்தை தயாரித்தது. நடிகர் விஜய் நடித்த இந்தப் படத்தை, வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. 'இலங்கை அதிபர் ராஜபக் ஷேவுக்கு நெருக்கமானவர்களால், லைகா தயாரிப்பு நிறுவனம் நடத்தப்படுகிறது; 'கத்தி' படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்' என, சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

கடந்த மாதம், 20ம் தேதி, இரண்டு சினிமா தியேட்டர்கள் தாக்குதலுக்கு ஆளாகின. இதையடுத்து, படத்தின் பிரின்ட்களிலும், விளம்பரங்களிலும், 'லைகா' பெயரை பயன்படுத்த மாட்டோம் என, நிறுவனம் சார்பில், கடிதம் அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, படமும் வெளியானது. இந்நிலையில், கடந்த, 7ம் தேதி, உள்துறை செயலருக்கும், டி.ஜி.பி.,க்கும், லைகா நிறுவனம் சார்பில், மனு அளிக்கப்பட்டது. போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அப்போது தான், நிறுவனத்தின் பெயரை, படத்திலும், விளம்பரத்திலும் வெளியிட முடியும் என, மனுவில் கூறப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு வழங்க கோரி, உயர் நீதிமன்றத்திலும், லைகா தயாரிப்பு நிறுவனம், மனுத் தாக்கல் செய்தது.

மனுவை, நீதிபதி ராமசுப்ரமணியன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜரானார். நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: ஒரு கட்சியின் தலைவருக்கு, மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்ட கடிதத்தில், 'நியாயமான கோரிக்கையை ஏற்கிறோம்; உணர்வுகளை மதிக்கிறோம்; படம் மற்றும் விளம்பரங்களில் இருந்து, நிறுவனத்தின் பெயரை நீக்க, ஒப்புக் கொள்கிறோம்' என, கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற கடிதங்களுக்கு, முக்கியத்துவம் அளிக்க முடியாது. ஒரு படத்தை திரையிட, சென்சார் போர்டு சான்று அளித்து விட்டால், மதம், ஜாதி, இனம், மொழி உணர்வுகளை காரணம் காட்டி, மீண்டும் தணிக்கை செய்ய, எந்த அமைப்பும் கோர முடியாது.

படத்தை வெளியிட சான்றளிக்கப்பட்ட பின், வசனம், காட்சிகள், தலைப்புகளை நீக்கும்படி கோருகிற அமைப்புகளின் நடவடிக்கையானது, 'பிளாக்மெயில்' போன்றதாகும். இத்தகைய மிரட்டல், வெற்றி பெற, அரசு அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு வெற்றி பெற அனுமதித்தால், சகிப்புதன்மை இல்லாத சிலரிடம், ஆட்சி அதிகாரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும், சரண்டர் செய்வதற்கு வழிவகுத்து விடும்.

இலங்கை அதிபருக்கு நெருக்கமானவர்கள் என, படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்த அமைப்புகள், அந்த படத்தின் மூலம், அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு வருமானம் கிடைப்பதை எதிர்க்கவில்லை.

படத்தை மக்கள் பார்ப்பதற்கும், அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. படத்தின் மூலம் அதிக வசூலாகி உள்ளது என, பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. அதன் மூலம், படத்துக்கு, சென்சார் போர்டு அல்லது மக்கள் தரப்பில், எந்த எதிர்ப்பும் இல்லை என்பதை காட்டுகிறது.
எந்த அமைப்பிடம், மனுதாரர் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டதோ, படத்தை நிராகரிக்கும்படி தமிழக மக்களை, அந்த அமைப்பால் கேட்க முடியவில்லை. தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை அகற்றியதால், அந்த அமைப்பும் சந்தோஷப்பட்டு கொண்டது.

எனவே, கொள்கை அடிப்படையில், எதிர்ப்பு இல்லை. தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை, படத்திலும், விளம்பரத்திலும் வெளியிட ஏதுவாக, மனுதாரருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். யாராவது அச்சுறுத்தலை ஏற்படுத்தினால், அவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்’’என்று உத்தரவிட்டுள்ளார்.

Saturday, November 22, 2014

வன்மம்: திரை விமர்சனம்!!!

22nd of November 2014
சென்னை:தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை கொடுத்த படங்களை விட நட்புக்கு மரியாதை கொடுத்த படங்கள்தான் அதிகம். அந்த வரிசையில் நட்பை கதைக்களமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் படம்தான் வன்மம்.

ராதா (விஜய் சேதுபதி) செல்லதுரை (கிருஷ்ணா) இருவரும் நண்பர்கள். எப்படிப்பட்ட நண்பர்கள் என்றால் வேலை வெட்டி ஏதும் பார்க்காமல் ஜாலியாக தண்ணியப் போட்டுக்கிட்டு ஊரைச் சுத்துற பார்ட்டிங்க. செல்லதுரைக்கும் அந்த ஏரியா தொழிலதிபர் ரத்னம் தங்கச்சி வதனா (சுனைனா)வுக்கும் செம லவ்வு. இது தெரிஞ்ச ரத்னம் செல்லதுரையை அடிக்கப் போகிறாரு. அப்போ நடக்கிற சண்டையில ரத்னம் கொல்லப்படுகிறார். ரத்னம் கொலைக்கு தானும் ஒரு காரணமாகி விட்டோமே என்று நினைத்து வருந்துகிற ராதா ரத்னம் குடும்பத்துக்கு சில உதவிகளின் மூலம் ஆறுதலா இருக்கிறாரு. ரத்னத்தின் எதிரி ஜெ.பி.யின் தாக்குதலில் இருந்து ரத்னத்தின் குடும்பத்தை காப்பாற்றுகிறார் ராதா. ஒருநாள் செல்லதுரை பேசுகிற பேச்சினால் மனம் உடையும் ராதா அவரது நட்பை தூக்கி எறிகிறார். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது மீதி கதை.

வெள்ளை சட்டையும் வேஷ்டியுமாய் பெரிய மனிதர் தோரணையுடன் படம் முழுக்க வருகிறார் விஜய் சேதுபதி. படத்தின் மிக முக்கியமான கேரக்டர் இவருடையதுதான். இவர் நடிப்பினால் அந்த கேரக்டரை தூக்கி நிறுத்துகிறார். கிருஷ்ணா விஜய் சேதுபதியின் நண்பராக வருகிறார். ஆடல் பாடலுடன் தொடங்கும் இவர்களது காட்சிகள் இருவரின் நட்பின் இடைவெளிக்குப் பின்னர் வன்மமாய் நகருகின்றன. சுனைனா கொஞ்சம் உதட்டுச் சாயத்தைக் குறைத்தே போட்டிருக்கலாம். குளோஸ் அப் காட்சிகளில் சுனைனா முகத்தைக் காட்டும் போது அவரது உதடு மட்டும் தனித்தே தெரிகிறது…. 

விஜய் சேதுபதியின் அப்பாவாக நடித்திருக்கும் அந்த மனிதர் யார்…? அடேங்கப்பா… என்ன ஒரு எதார்த்தமான நடிப்பு. ‘உதவி செய்ய போயிதானே இப்படி ஆச்சு…? ஏம்பா நீ தலை குனிஞ்சி நிக்கலாமா?’ என்று விஜய் சேதுபதியின் நாடியை பிடித்து அவர் தலைநிமிர்த்தும் காட்சி செம. அவரே டப்பிங் பேசினாரோ… வேறு யாரும் டப்பிங் பேசினார்களோ… ஆனால் படத்திலேயே குமரி மாவட்டத்து வட்டார வழக்கு மொழியை சரியாக பேசுவதும் இவர் மட்டும்தான். ரத்னம் கார் டிரைவராக வரும் குட்டி மற்றும் இன்னொரு பையனும் நடிப்பில் ரெக்கை கட்டியிருக்கிறார்கள். ஜிவ்வென வேகத்துடன் வரும் ரத்னம் திடீரென கொல்லப்பட்டதும் திரையில் மட்டுமல்ல… திரையரங்கிலும் ஒரு நிசப்தம் நிலவுகிறது. ஜெபி, போஸ் வெங்கட், அம்மா நடிகை சிவரஞ்சனி, முத்துராமன் எல்லோருமே தங்கள் கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

வழக்கமான தமிழ் சினிமாக்கள் காட்டிய குமரி மாவட்டத்தின் இடங்களைத் தாண்டியும் சில ஏரியாக்களை பதிவு செய்திருக்கிறது பால பரணியின் கேமிரா. தமனின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கிறது. ‘பாடட்டா பாடட்டா’ தளாம் போட வைக்கும் பாடல் என்றால் ‘மனமே மனமே’ சோகமான பாடல் என்றாலும் மனதை கவரும் பாடல் இது. படத்தை இயக்கியிருக்கிறார் ஜெய் கிருஷ்ணா. இவர் குமரி மாவட்டத்துக்காரர் என்பதாலேயே இந்த பகுதியை களமாகக் கொண்டு வன்மம் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். முதல் பாதி சாதாரணமாக நகர்ந்தாலும், இடைவேளைக்குப் பிறகு ஆக்க்ஷன், கண்கலங்க வைக்கும் காட்சிகள் என்று படம் முழுக்க தேரோட்டியிருக்கிறார் இயக்குநர்.

Friday, November 21, 2014

கோவா திரைப்பட விழாவில் ரஜினிக்கு சிறந்த திரையுலக பிரமுகர் விருது: அமிதாப் வழங்கினார்!!!

21st of November 2014
சென்னை:இந்திய சினிமா நூற்றாண்டையொட்டி சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துக்கு 2014-ஆம் ஆண்டின் சிறந்த திரையுலக பிரமுகர் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கோவாவில் நேற்று  45-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரி அருண் ஜெட்லி விழாவை தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், ரஜினி காந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில், ரஜினிகாந்துக்கு சிறந்த திரையுலக பிரமுகருக்கான விருது வழங்கப்பட்டது. மத்திய மந்திரி அருண் ஜெட்லி, நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் இணைந்து வழங்க, ரஜினிகாந்த் விருதினை பெற்றுக்கொண்டார்.

விருதினை பெற்றுக்கொண்ட ரஜினி காந்த், அமிதாப்பின் காலைத் தொட்டு வணங்கினார். பின்னர் பேசிய ரஜினிகாந்த், மத்திய அரசு வழங்கிய இந்த விருதினை தனக்கு அளிக்கப்பட்ட கவுரவமாக கருதுவதாகவும், தனது வெற்றிக்கு ஆதரவாக இருந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இந்த விருதை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தார்.

வரும் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் 75 நாடுகளை சேர்ந்த 179 படங்கள் திரையிடப்படுகின்றன.

Thursday, November 20, 2014

விஷால் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்: சரத்குமார் எச்சரிக்கை!!!

20th of November 2014
சென்னை:அவதூறு செய்திகளைப் பரப்பினால், விஷால் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார் நடிகர் விஷால். விஷாலின் குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் இதுவரை பதிலளிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் திருச்சியில் நிருபர்களை சந்தித்த சரத்குமார் முதன் முறையாக விஷாலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார். அச்சந்திப்பில் சரத்குமார் பேசியது:

விஷால் தொடர்ந்து ஏன் நடிகர் சங்கத்தை பற்றி விமர்சித்து பேசி வருகிறார் என தெரியவில்லை. இதுவரை விஷாலுக்கு எந்த பதிலும் கூறவில்லை. முதன் முறையாக பதில் சொல்ல விரும்புகிறேன்.

நடிகர் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நஷ்டத்தில் இருந்த நடிகர் சங்க நிதியை நாங்கள் தற்போது 3½ கோடி நிதி இருப்பு இருக்கும் வகையில் உயர்த்தி உள்ளோம். இதன் மூலம் நலிந்த கலைஞர்களுக்கு உதவி வருகிறோம். மீதி உள்ள நிதியை வைத்து நடிகர் சங்க இடத்தில் கட்டிடம் கட்டி அதன் மூலம் நலிந்த கலைஞர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளோம். அதன் அடிப்படையில் திரைப்பட துறையில் தொடர்பு உள்ள சத்யம் நிறுவனத்திற்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கினோம். இதில் 15 கோடி நடிகர் சங்கத்தின் நிதி. மீதி 50 கோடி நிதி சத்யம் நிறுவனத்தினுடையது. இதன் மூலம் நடிகர் சங்கத்திற்கு ஆண்டுக்கு ரூ.24 லட்சம் வாடகை வரும்.

மொத்தம் 29 வருடம் 11 மாதத்திற்கு லீசுக்கு விடுகிறோம். இதன் முடிவில் ரூ.170 கோடி நடிகர் சங்க சொத்து மதிப்பு உயர்ந்திருக்கும். இதை பொதுக்குழு கூட்டி அனுமதி பெற்று தான் செய்துள்ளோம். நடிகர் சங்கத்தில் இருந்து யாரும் ஒரு பிடி மண்ணை கூட எடுத்து செல்ல முடியாது. ஆனால் விஷால் எனக்கு நோட்டீஸ் அனுப்புவதாக கூறுவது சரியல்ல.

பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் இதைப்பற்றி எல்லாம் கேள்வி கேட்கக்கூடாது. விஸ்வரூபம் படப்பிரச்சினையில் ஒரு நாள் இரவு முழுவதும் கமலுடன் அமர்ந்து நானும் ராதாரவியும் பேசினோம் என்பது விஷாலுக்கு தெரியவில்லையா? பூச்சி முருகன் என்பவர் அவருக்கு பதவி வழங்கவில்லை என்பதற்காக வழக்கு போட்டுள்ளார். நடிகர் சங்க நிர்வாகிகள் மீது குறை கூறும் அவரை கண்டிக்காமல் விஷால் தவறான தகவலை கூறினால் அவர் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். இனியும் இது போன்று செயல்பட்டால் விஷாலை சங்கத்தில் இருந்து நீக்குவோம் என்று எச்சரிக்கிறேன்." என்று கூறியுள்ளார்.

Wednesday, November 19, 2014

Actress Gauthami Nair Latest Photoshoot Gallery!!!

19th of November 2014
சென்னை:Tags : Gauthami Nair New Spicy Stills, Gauthami Nair Actress Latest images, Gauthami Nair New Hot Gallery, Gauthami Nair Unseen Photoshoot, Gauthami Nair Actress New Pictures, Gauthami Nair Latest Photos, Gauthami Nair Hot Pics in Sare.

நடிகை ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!!!

19th of November 2014
சென்னை:நடிகை ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட உள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா படங்களில் கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இப்படங்களுக்கு பின் பட வாய்ப்புகள் குவிந்தன. சம்பளமும் கூடியது.

தற்போது சிவகார்த்திகேயனுடன் காக்கிசட்டை, ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பென்சில், விக்ரம் பிரபுவுடன் வெள்ளைக்கார துரை படங்களில் நடிக்கிறார். அதர்வாவுடன் ஈட்டி படத்திலும் நடிக்கிறார். இப்படங்களுக்கு முன்பு நகர்ப்புறம், காட்டு மல்லி என இரு படங்களில் நடிக்க ஸ்ரீதிவ்யாவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அப்படங்கள் நின்று போயின.

அவ்விரு படங்களின் படப்பிடிப்பையும் தொடர்ந்து நடத்த அதன் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் ஸ்ரீதிவ்யா கால்சீட் கொடுக்க மறுக்கிறாராம்.

இதனால் இரண்டு தயாரிப்பாளர்களும் ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கிறார்கள்.

Tuesday, November 18, 2014

லிங்கா ஆடியோ விழாவில் ரஜினியின் ஓபன் டாக்!!!

18th of November 2014
சென்னை:சூப்பர் ஸ்டாருணா சூப்பர் ஸ்டார்தான் உள்ளதை உள்ளது படியே பேசக்கூடிய நேர்மையான மனிதர்.

லிங்கா படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினி பேசியதாவது , சுமார் இரண்டரை வருடமா எனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது, நடிக்கருக்கே சான்ஸ் இல்லா அந்த அளவுக்கு உடல் நிலை சரியில்லை, அதுக்கப்பறம் கோச்சடையான் பட வேலைகளை ஆரபித்தோம் , பாவம் ஒரு சின்ன குழந்த சௌந்தர்யா மேல துக்கி ஒரு பெரிய மலையே வச்சுட்டோம் பாவ அந்த பொன்னு வந்து அவ்வளவு கஷ்டப்பட்டது.

அதற்கு ஒரு காரணம் நானு கூடத்தான் கோச்சடையான் படம் நம்மளுக்கு சினிமான என்ன , மக்கள் என்ன , இண்டஸ்ட்ரி என்ன , பணம் என்ன , டைம் என்ன என்று எல்லாத்தையும் புரியவச்சுருச்சு.
,
கோச்சடையான் படம் எடுக்கும் போது நான் பல படத்துக்கு ரெடியாகிட்டேன் , ஆனா கோச்சடையான் படத்த ரிலிஸ் பண்ணாம, அடுத்த படத்தில் நடிக்க மனசு இல்ல இதைய முதல ரிலிஸ் பண்ணனும் , எப்பமே ஒரு ப்ராபளம் வந்த உடனே அதை முடிச்சுட்டுதான் அடுத்ததுல என்ட்ரி ஆகணும் என ஓபனாக பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Monday, November 17, 2014

Happy Ending Movie Promotions Stills At Mithibai College!!!





17th of November 2014
சென்னை:Tags : Happy Ending Movie Promotions Stills At Mithibai College, Happy Ending Movie Promotions Photos, Happy Ending Movie Promotions Event Gallery

Ten Kings Book Launch by Padma Bhushan Dr.Kamal Haasan Event Stills!!!












17th of November 2014
சென்னை:Tags : Ten Kings Book Launch by Kamal Haasan images, Ten Kings Book Launch Function Photos, Ten Kings Book Launch by Padma Bhushan Kamal Haasan Gallery, Ten Kings Book Release Event Stills, Ten Kings Book Launch Photos, Ten Kings Book Release Pictures.