.

.

Friday, June 5, 2015

பேய் ஹிட் : ‘காஞ்சனா 2’வின் புதிய இலக்கு!!!

5th of June 2015
சென்னை:சமீபகால தமிழ்ப்பட போஸ்டர்களில் ‘பேய் ஹிட்’ என்றொரு வார்த்தையை ரசிகர்கள் அடிக்கடி பார்த்திருப்பார்கள். உண்மையில் இந்த ‘பேய் ஹிட்’ என்ற வார்த்தைக்கு தமிழ் சினிமாவிற்கு அர்த்தம் சொன்ன படமொன்றால், அது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘காஞ்சனா 2’தான் என அனைவருமே ஒப்புக்கொள்வார்கள். அந்தளவுக்கு இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது.

ஏப்ரல் 17ஆம் தேதி வெளியான இப்படம் நாளை (ஜூன் 5), 50வது நாள் என்ற முக்கிய மைல்கல்லை எட்டுகிறது. காஞ்சனா 2விற்குப் பிறகு ஒரு சில முக்கிய படங்கள் ரிலீஸான பின்னரும்கூட தமிழகத்தின் சில தியேட்டர்களில் இன்னமும் ‘காஞ்சனா 2’ ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. தற்போதுவரை இப்படம் தமிழகத்தில் மட்டுமே 50 கோடிகளுக்குள் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

‘காஞ்சனா 2’வின் தெலுங்கு டப்பிங் ‘கங்கா’ மே 1ஆம் தேதி வெளியானது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இப்படம் சூப்பர்ஹிட். இப்படத்தின் அதிரிபுதிரி வெற்றியால் ‘காஞ்சனா 3’ எப்போது தயாராகும் என ரசிகர்கள் ‘பேய்த்தன’மான எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

த்ரிஷா, அஞ்சலியுடன் தாய்லாந்து பறந்த ஜெயம் ரவி!!!

5th of June 2015
சென்னை:அலெக்ஸ்பாண்டியன்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘அப்பாடக்கர்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் சுராஜ். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க, த்ரிஷா, அஞ்சலி என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, விவேக், அஸ்வின் ராஜா, ராஜே
ந்திரன், பூர்ணா (சிறப்புத் தோற்றம்) ஆகியோரும் நடிக்கிறார்கள். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் எஸ்.எஸ்.தமன்.

‘டாக்கி போர்ஷனு’க்கான படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்போது பாடல்களுக்கான படப்பிடிப்புத் துவங்கியுள்ளது. ‘சதிகாரி...’ எனத் தொடங்கும் பாடல் படப்பிடிப்பு ஒன்றிற்காக தற்போது தாய்லாந்தில் முகாமிட்டுள்ளது ‘அப்பாடக்கர்’ டீம். இயக்குனர் சுராஜ், ஜெயம் ரவி ஆகியோருடன் அஞ்சலியும், த்ரிஷாவும் தாய்லாந்தில் இருக்கிறார்களாம். தற்போது அங்கு ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக ஜெயம் ரவி ட்வீட் செய்துள்ளார்.