.

.

Thursday, July 31, 2014

Vennila Veedu Movie New Posters!!!

 31st of July 2014
 சென்னை:Tags : Vennila Veedu Movie New Posters, Vennila Veedu Film Banner images, Vennila Veedu Latest Poster, Vennila Veedu Movie Wallpaper Pictures, Vennila Veedu New Movie Stills Gallery

Wednesday, July 30, 2014

ஹீரோக்களுடன் நெருங்கி பழகுவது ஏன்? லட்சுமிமேனன் விளக்கம்!!!

30th of July 2014 சென்னை:ஹீரோக்களுடன் நெருங்கி பழகுவது ஏன் என்பதற்கு பதில் அளித்தார் லட்சுமி மேனன்.‘கும்கி‘, ‘சுந்தரபாண்டியன்‘ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் லட்சுமி மேனன். தற்போது கார்த்தி ஜோடியாக ‘கொம்பன்‘ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஜிகர்தண்டா‘ படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார். இவர் ஹீரோக்களுடன் நெருங்கி பழகுவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதுபற்றி லட்சுமிமேனன் கூறியதாவது:சக நடிகர்களுடன் நட்பாக இருக்க வேண்டியது அவசியம். அப்போது தான் நடிப்பது எளிதாக இருக்கும். இல்லாவிட்டால் ஒரு நடிகருடன் நடிக்கும் போது அது அசவுகரியமாக தோன்றும். உடன் நடிக்கும் ஹீரோவோ, சக நடிகரோ நண்பராக இருந்தால் அதன் பலன் படத்தின் காட்சிகளில் பிரதிபலிக்கும்.

அது படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கும்‘ என்றார்.குடும்பப்பாங்கான நடிகை என்று பெயரெடுத்த லட்சுமி மேனன் ‘நான் சிகப்பு மனிதன்‘ படத்தில் லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடித்து தனது குடும்பப்பாங்கு இமேஜை உடைத்தார். நெருக்கமான இந்த நடிப்புக்கு காரணம் விஷாலுடன் ஏற்பட்ட நட்புதான் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. மற்ற படங்களில் நடிக்கும் போதும் அந்த பட ஹீரோவுடன் நெருக்கமான நட்புடனே லட்சுமி மேனன் பழகுகிறாராம்.

(தமிழ் 'தில்லாலங்கடி ரிமேக்)' 100 கோடி வசூலை நோக்கி சல்மான் கானின் 'கிக்' சாதனை!!!

30th of July 2014
சென்னை:தெலுங்கில் ரவி தேஜா, இலியானா மற்றும் ஷாம் நடித்து 2009 ஆம் ஆண்டு வெளியான ஆக்‌ஷன் காமெடி படம் 'கிக்'.இதே படத்தை தமிழில் 'தில்லாலங்கடி' என்ற பெயரில் 'ஜெயம்' ரவி, தமன்னா, ஷாம் நடிப்பில் ரிமேக் செய்யப்பட்டது.
தற்போது இந்தப் படம் இந்தியில் 'கிக்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. சல்மான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், ரன்தீப் ஹூடா நடித்த இப்படத்தை சாஜித் நடியட்வாலா இயக்கினார்.

கடந்த ஜூலை 25ம் தேதி அன்று ரிலீஸ் ஆன  'கிக்' படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான முதல் இரண்டு நாட்களில் 50 கோடிகளை வசூல் செய்த இப்படம் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் மேலும் 47 கோடிகளை குவித்து மொத்தமாக 97 கோடிகளை வசூலித்துள்ளது.
வெறும் மூன்று நாட்களில் 100 கோடி க்ளப்பில் இணையும் மிகச்சில படங்களில் சல்மானின் 'கிக்' படமும் இணைந்துள்ளது. தெலுங்கு 'கிக்', தமிழ் 'தில்லாலங்கடி' என இரு படங்களின் முக்கிய அம்சமே காமெடிதான் .
இந்தி 'கிக்' படத்தில் காமெடி சற்று குறைவாக இருப்பினும் சல்மான் படம் என்றாலெ 100 கோடி வசூல் என்ற நிலை உள்ளது. அந்த வகையில் இந்த படமும் சோடை போகவில்லை. சல்மானின் முந்தைய படங்களை போல் இதுவும் கம்பீரமாக நூறு கோடி க்ளப்பில் இணைந்துள்ளது.

யுடிவி தயாரிப்பில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள அஞ்சான் படத்தை தணிக்கைக்குழுவினர் பார்க்க எதிர்ப்பு!!!

30th of July 2014சென்னை:யுடிவி தயாரிப்பில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள அஞ்சான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளிவருகிறது. கடந்த சில வாரங்களாக பரபரப்பாக நடைபெற்ற அஞ்சான் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் அண்மையில் நிறைவுற்று, படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி தயாராகி உள்ளது. சில தினங்களுக்கு முன் அஞ்சான் படத்தை சூர்யா, லிங்குசாமி உட்பட குறிப்பிட்ட சிலர் பார்த்தனர். படத்தை பார்த்த சூர்யாவுக்கு பரம திருப்தி. சூர்யாவின் பாராட்டைத் தொடர்ந்து படத்தை சென்சாருக்கு அனுப்பும் பணிகளைத் தொடங்கினார்கள்.
 
அஞ்சான் படத்தை சில தினங்களுக்கு முன் சென்சாருக்கும் அப்ளை பண்ணி இருக்கின்றனர். தணிக்கைக்காக அனுப்பப்பட்ட படங்களை தணிக்கைக்குழுவினர் பார்க்க அப்ளை பண்ணப்பட்ட சீனியாரிட்டி வரிசைப்படி தேதி கொடுக்கப்பட வேண்டும். அஞ்சான் படத்துக்கு முன்பே வேறு பல படங்கள் அப்ளை பண்ணப்பட்டு, அப்படங்களைப் பார்க்க தேதி கொடுக்கப்படாதநிலையில், கடைசியாய் அப்ளை பண்ணப்பட்ட அஞ்சான் படத்துக்கு தேதி கொடுத்திருக்கிறது தணிக்கைக்குழு. அதாவது இன்று அஞ்சான் படத்தைப் பார்க்க இருக்கிறது தணிக்கைக்குழு.
 
விதியை மீறி அஞ்சான் படத்தை முன் கூட்டியே பார்ப்பதற்கு, ஏற்கனவே படங்களை அப்ளை பண்ணிய தயாரிப்பாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தங்களின் எதிர்ப்பை மீறி அஞ்சான் படத்தை தணிக்கைக்குழுவினர் பார்த்தால், தணிக்கை சான்றிதழை வழங்க தடை கேட்டு வழக்குத்தொடர திட்டமிட்டிருக்கின்றனர். இதற்கிடையில் இந்தப் பிரச்சனையை தவிர்க்க அஞ்சான் படத்தை மும்பையில் தணிக்கை செய்யலாமா என்ற யோசனையிலும் ஈடுபட்டிருக்கிறதாம் யுடிவி நிறுவன

பாலிவுட் படத்தில் நடிக்கும் சான்ட்ரா!!!

30th of July 2014
சென்னை:தொலைக்காட்சி தொடர்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்த சாண்ட்ரா, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ படத்தின் மூலம் வெள்ளித் திரையில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். யுரேகா இயக்கியுள்ள இப்படத்தை ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷ, ஜே.சதீஷ்குமார் உலகம் முழுவதும் வெளியிடுகிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் நாயகி சாண்ட்ராவுக்கு இந்திப் பட வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. டைரக்டர் அந்தோணி டிசோசாவின் இயக்கத்தில் இம்ரான் ஹஷ்மியுடன் இணைந்து நடிக்கும், இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தி படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னணி நடிகைகள் பலரும் பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு இருகையில், அறிமுக நடிகையான சாண்ட்ரா இந்த பாலிவுட் வாய்ப்பு குறித்து கூறுகையில்ம், “இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய பட வாய்ப்பு பற்றி சான்ட்ரா கூறுகையில், “இம்ரானைக் காதலிப்பவளாக நான் இந்தப் படத்தில் தோன்றுகிறேன். என்னுடைய புகைப்படங்களைப் பார்த்த டைரக்டர் அந்தோணி நான் இந்த கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவளாக இருப்பேன் என்று தேர்ந்தெடுத்துள்ளார். நான் சில காட்சிகளில் மட்டும் இதில் தோன்றினாலும் பாலிவுட்டில் நுழைவது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்” என்று குறிப்பிட்டார்.

சமீரா ரெட்டி ஹீரோயினாக நடிக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட்-3ல் விஜய்சேதுபதி கலந்துகொள்ளும் விழிப்புணர்வு பேரணி!!!

30th of July 2014
சென்னை:பிறவியிலேயே சின்னக்குழந்தைகளை தாக்கும் நோய்களுள் ஒன்றுதான் தசை சிதைவு நோய்.. 3000 குழந்தைகளில் ஒருவரை இந்த நோய் தாக்குகிறது. இந்த நோய் தாக்கிய குழந்தைகள் நடக்க சக்தியற்று அடிக்கடி கீழே விழுவர். உடனே தானாக எழுந்து நிற்கவும் சிரமப்படுவர்.. மாடிப்படி ஏற முடியாது. சொல்லப்போனால் அவர்களின் வாழ்க்கை சக்கர நாற்காலியிலேயே கழிந்துவிடும் அபாயமும் உண்டு.
ஆனால் அதற்காக இதை இப்படியே விட்டுவிட முடியுமா..? இந்த மாதிரி நோய் இனி வரும் காலங்களில் எந்த ஒரு குழந்தையையும் தாக்கிவிடக்கூடது என்பதற்காகத்தான் ‘ஜீவன் பவுண்டேசன்’ என்கிற அமைப்பு ஒரு விழிப்புணர்வு பேரணியை சென்னையில் நடத்த இருக்கிறது.
மயோரேலி’ எனப்படும் இந்த பேரணி ஆகஸ்ட்-3ஆம் தேதி சென்னை மெரீனா கடற்கறையில் காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த பேரணியில் இந்த தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் திரையுலக நட்சத்திரங்களான விஜய்சேதுபதி, வரலட்சுமி, காயத்ரி ஆகியோரும் கலந்துகொண்டு மக்களுக்கு இந்த  நோய் குறித்த சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக பிறக்கவேண்டும் என்கிற எண்ணம் உள்ளவர்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டு சிறப்பிக்கும்போது இந்த விழிப்புணர்வு பேரணியின் நோக்கம் வெற்றியடையும்.. பேரணியின் நோக்கமும் நிறைவேறும். அதற்காகவே தனது பிசியான படப்பிடிப்பு வேலைகளுக்கிடையே நேரம் ஒதுக்கியுள்ளார் விஜய்சேதுபதி.

Sunday, July 27, 2014

The Youngest Choreographer in India Anusha Swamy!!! இந்தியாவின் இளைய நடன இயக்குனர் - அனுஷா ஸ்வாமி!!!



 
27th of July 2014
சென்னை:Anusha Swamy has been dancing from the age of 6 and has pursued the Dancing Art from various prowess artistes like Vempatti Chinna Sathyam, M.V.N.Murthy. She knows bharathnatyam, kuchipudi, kathak, salsa, contemporary, hip-hop, tango, cha-cha, rumba, samba, bachata, etc.

She's done close to 500 stage shows. She has won medals at the UK championship of Latin American and Ballroom dancing held in 2009. She has also worked with eminent dance directors like Raghava Lawrence, Prabhudeva, Raju Sundaram, Brinda, Sridar, Saroj Khan, Prem Rakshit. Few of the movies are Engeyum Kadhal, Vedi, Muran, Vettaikaran, Velayudham, Love anthem, Rebel, Bhai, Manam, Muni-3, Legend, Irumbu kuthirai, etc Maryaan,Kochadayan .Also there are a few hindi movies to her credentials such as Shudh desi Romance, Yeh jawani hai Deewani, Bullet Raja, R Rajkumar, Police Giri etc. she's also worked with the international artiste AKON. She has also done a song in aakko.

Tags : The Youngest Choreographer Anusha Swamy With Rajini images, The Youngest Choreographer in Anusha Swamy With Vaijay Stills, Choreographer Anusha Swamy Photos, Choreographer Anusha Swamy  With Hollywood Star Akon Gallery, Choreographer Anusha Swamy Working Pictures, Choreographer Anusha Swamy With Master Prabhu Deva.

அனுஷா ஸ்வாமி, தனது 6 வயது முதலே நடனத்தில் ஆர்வம் காட்டினார். வெம்பட்டி சின்ன சத்யம், எம்.வி.என்.மூர்த்தி போன்றவர்களிடம் நடன கலையை முறையே கற்றார்.

பரதநாட்டியம், குச்சிப்புடி, கத்தக், சல்சா, ஹிப்-ஹாப், சம்பா போன்ற பல நடன கலைகளில் தேர்ச்சி பெற்றவர் அனுஷா ஸ்வாமி. 500க்கும் மேற்ப்பட்ட நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

பால்ரூம் நடனத்திற்காக யு.கே. சாம்பியன்ஷிப் ஆப் லத்தின் அமெரிக்கன் (UK championship of Latin அமெரிக்க போட்டியில் பதக்கத்தை வென்றவர்.

ராஜீசுந்தரம், பிரபுதேவா, ராகவா லாரன்ஸ், ப்ருந்தா, ஸ்ரீதர், சரோஜ் கான், ப்ரேம் ரக்ஷித் போன்ற நடன இயக்குனர்களிடம் பணிபுரிந்துள்ளார்.

கோச்சடையான், வேட்டைக்காரன், வேலாயுதம், எங்கேயும் காதல், வெடி உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் யே ஜவானி ஹே திவானி, புல்லட் ராஜா, ஆர். ராஜ்குமார் போன்ற ஹிந்தி படங்களிலும் பணிபுரிந்துள்ளார்.

உலக புகழ் பெற்ற இசை கலைஞர் ஆகோன் உடன் பணிபுரிந்துள்ளார். ஆக்கோ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீபாவளி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்: விஜயுடன் மோத தயாராகும் விக்ரம்!!!

27th of July 2014
சென்னை:இந்த தீபாவளி ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமாகத்தான் இருக்கும் போல. விஜய் நடித்த கத்தியுடன் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படமும் போட்டியில் இறங்கிறதாம்.

நண்பன் படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர், விக்ரமை வைத்து ஐ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஷங்கர் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக உருவாக்கிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக படமாக்கப்பட்டு வருகிறது. விக்ரமுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்திருக்கிறார். இந்தப் படத்தைப் பற்றி பல்வேறு விதமான வதந்திகள், செய்திகள் வந்தாலும், படப்பிடிப்பு முழுவதுமாக நடந்து முடிந்து தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

ஐ படத்தில் எண்ணற்ற கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் தான் வெளியீடு தாமதமடைகிறதாம். அவையனைத்தும் முடிந்த பின் படத்தை தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் “கத்தி” படம் மற்றும் விஷால் – ஸ்ருதி ஹாசன் நடிக்கும் “பூஜை” இந்த இரண்டு படங்களும் தீபாவளியன்று ரிலீஸாகவிருக்கிறது. தற்போது இந்த தீபாவளி ரேஸில் புதிதாக ஷங்கரின் “ஐ” படமும் இணைந்துள்ளது.

வைரமுத்து எழுதிய பாடலை எந்த காலத்திலும் இளையராஜா பாடமாட்டார்: இளையராஜாவின் ஒப்புதலுடன் அவரது பேன்ஸ் கிளப் அதிகாரப்பூர்வ பக்கத்தில் செய்தி!!!

27th of July 2014
சென்னை:1977ல் பாரதிராஜா இயக்கிய முதல் படம் 16 வயதினிலே, அதையடுத்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் படங்களையடுத்து 1980ல் அவர் இயக்கிய படம்தான் நிழல்கள். இந்த படத்தில்தான் இளையராஜாவின் இசையில் கவிஞர் வைரமுத்து பொன்மாலைப்பொழுது என்ற பாடலை எழுதி அறிமுகமானார். இளையராஜாவுக்கு அது 97வது படமாகும்.
 
அதையடுத்து, இளையராஜாவின் இசையில் நிறைய பாடல்கள் எழுதினார். ஆனால் ஒரு கட்டத்தில், அவர்களது நட்பில் உரசல் ஏற்பட்டது. அதன்பின்னர் இளையராஜாவின் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதவில்லை. இந்த நிலையில், சீனுராமசாமி இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் இளையராஜாவின் இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
 
இந்த நிலையில், அந்த படத்தில் வைரமுத்து எழுதியுள்ள ஒரு பாடலை இளையராஜா பின்னணி பாடப்போவதாக கோலிவுட்டில் கடந்த சில வாரங்களாக செய்தி பரவி வந்தது. ஆனால் தற்போது அது முற்றிலும் தவறான செய்தி என்று இளையராஜாவின் ஒப்புதலுடன் அவரது பேன்ஸ் கிளப் அதிகாரப்பூர்வ பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
 
அந்த மறுப்பு செய்தி விவரம் வருமாறு- வைரமுத்து எழுதிய பாடலை எந்த காலத்திலும் இளையராஜா பாடமாட்டார். தனது படத்துக்கு விளம்பரம் கருதி சீனுராமசாமி இப்படியொரு செய்தியை பரப்பி விட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
 
மேலும், இயக்குனர் பாலா தனது தாரை தப்பட்டை படத்தில் எப்படியேனும் இளையராஜா இசையில் வைரமுத்துவை பாடல் எழுத வைத்து விட வேண்டும் என்று முயற்சி எடுத்தார். ஆனால், அப்படியொரு ஆசை இருந்தால் வேறு யாரையாவது வைத்து இசையமைத்துக்கொள் என்று பாலாவிடம் இளையராஜா உறுதியாக சொல்லிவிட்டார். அதன்பிறகே வைரமுத்துவை பாடல் எழுத வைக்கும் முயற்சியை தவிர்த்தார் பாலா.
 
அதையடுத்துதான் இப்போது இப்படியொரு செய்தியை சீனுராமசாமி பரப்பி விட்டுள்ளார். ஆக, இளையராஜா அவருக்கு பாடல் எழுதும் வாய்ப்பைக்கொடுக்க நேரடியாக மறுத்து விட்டதால்,. இப்படி யுவன் படத்தின் மூலமாக அதாவது கொள்ளை புறம் வழியாக நுழைய முயற்சித்துள்ளார் வைரமுத்து என்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
 
முக்கியமாக, வாழ்க்கை கொடுத்தவருக்கு எதிராகவே பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வைரமுத்துவின் பாடலை இளையராஜா பாடுகிறார் என்று வெளியான செய்தியை நம்புவதற்கு இளையராஜாவின் ரசிகர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்றும் இளையராஜா பேன்ஸ் கிளப் சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

முடி வளர்ந்ததும் சொல்லி அனுப்புரேன் வாங்க: பாண்டியராஜுக்கு கூலாக பதிலளித்த சிம்பு!!!

27th of July 2014
சென்னை:இயக்குனர் பாண்டிராஜ்க்கு இது போதாத காலம் போல. பின்ன சிவகார்த்திகேயன் கால்ஷீட் கொடுத்தும்கூட சிம்புவை வைத்து படம் இயக்க ஆசைப்படுவாரா? எந்த நேரத்தில் இது நம்ம ஆளு படத்தை துவங்கினாரோ இன்னும் முடிந்தபாடில்லை
சூர்யாவிடம் ஒரு கதை சொல்ல, அந்த கதையை சூர்யாவே தயாரிக்க முன் வந்தார். போனஸாக ஒரு கெஸ்ட் ரோலில் வேறு நடிக்க சம்மதித்தாராம்.
. பொறுத்துபார்த்த பாண்டிராஜ் இடையே

படபூஜையும் நடந்து சில நாட்கள் சூட்டிங்கும் நடத்தினார். இருந்தாலும் இது நம்ம ஆளு படத்தை முடித்துவிட்டால் நிம்மதியாக அடுத்த வேலையை பார்க்கலாமே என்று தோன்றவே அடு விசயமாக பேச சிம்புவை பார்க்க சென்றாராம். அங்கே போனால் பாண்டிராஜூக்கு கடும் அதிர்ச்சி. ஆம் சிம்பு தனது ஹேர்ஸ்டைலை முற்றிலும் மாற்றி இருந்தாராம்.

அதனை கண்ட பாண்டிராஜ், நீங்க இப்படி ஹேர் ஸ்டை மாற்றிட்டீங்க…இப்படி இருந்தா படத்துல கண்ட்டினியூட்டி இருக்காதே? அதைவிட கொடுமை இது வளரவே இன்னும் ஒரு மாதம் மேலாகும் போலிருக்கே என்று கூறினாராம். அதற்கு வளரட்டுமே அதுக்கென்ன இப்போ? வளர்ந்த பிறகு சொல்லியனுப்புறேன் வாங்க பேசிக்கலாம்’ என்றாராம் சிம்பு.

ஆரம்பத்துலயே எல்லோரும் சொன்னாங்களே என்று தன் நிலைமையை நினைத்து இப்போது நொந்துபோயிருப்பார் பாண்டி என்பது உண்மை

விஜய்க்கு அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டம் கிடைக்குமா?!!!

27th of July 2014
சென்னை:விஜய்க்கு அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டம் வழங்கும் விழா மதுரையில் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள அனைத்து நடிகர்களுக்கும் விஜய் அழைப்பு விடுத்துவருகிறார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த விழாவுக்கு அரசு அனுமதி கிடைக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விழாவுக்கு தடை விதிக்க அரசு தெரிவித்துள்ள காரணமும் தவிர்க்க முடியாதது என்றே தெரிய வந்துள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர போராளிகளுக்கு மரியாதை செலுத்தும் நாளாக நாம் கொண்டாடுகிறோம். 
 
அன்றைய தினத்தில் மாநிலமெங்கும் நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடும் நேரத்தில், விளம்பரத்துக்காக எடுக்கப்படும் இந்த விழாவால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் இந்த விழாவைத் தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளதாம். இதனால் விஜய் மற்றும் விழாக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.

Thursday, July 24, 2014

தல படத்திற்கு ஹாரிஸின் முதல் பாட்டு!!!

24th of July 2014
சென்னை:கௌதம் மேனன் இயக்க, அஜித் நடிக்கும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் முதன் முதலாக இசை அமைக்கிறார் அல்லவா? இந்தப் படத்தில் அஜித்துக்கு அனுஷ்கா, த்ரிஷா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்க, இப்போது அஜித், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் கௌதம் மேனன். 

இந்தப் படத்தில் அஜித் - த்ரிஷா ஜோடிக்கான ஒரு ரொமான்டிக் பாடலை தாமரை எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை பாடகர் கார்த்திக்கின் குரலில் தற்போது பதிவு செய்து வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இந்த தகவலை ஹாரிஸ் ஜெயராஜே தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட்டியிருக்கிறார். 

ஏற்கெனவே ஹாரிஸ் – கௌதம் கூட்டணி நிறைய ஹிட் பாடல்களை தந்துள்ள நிலையில், ஹாரிஸ் முதன் முதலாக அஜித்துடன் இணைந்துள்ள இப்படத்தின் பாடல்களையும் ஹிட் அடிப்பார் என்றே எதிர்பார்ப்போம்.

மீண்டும் ரஜினி, கமலுடன் இணையும் பிரபு!!!

24th of July 2014
சென்னை:ரஜினி, கமல் ரசிகர்களின் செல்லப்பிள்ளை யாரென்றால் அது பிரபுதான். அவர் 1990களில் ரஜினி கமலுடன் இணைந்து நடித்த படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட். அதிலும் ‘குரு சிஷ்யன்’ படத்தில் ரஜினியுடன் நடித்தாலும் நடித்தார்.. இன்றுவரை அவரை ரஜினியின் அன்புத்தம்பியாகவே பார்க்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். kuselankuselan இப்போது லிங்காவில் ரஜினியுடன் நடிக்கிறார் பிரபு.

அதேபோல கமலுடன் வெற்றிவிழா மற்றும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் ஆகிய படங்களில் நடித்த பிரபு kusekuselaகிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு தற்போது ‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கில் கமலுடன் இணைந்து நடிக்கிறார்.kuselan kஇதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் த்ரிஷ்யம் கன்னட ரீமேக்கில் இதே ரோலில் பிரபு நடிக்க அவருக்கு ஜோடியாக மலையாளத்தில் நடித்த ஆஷா சரத்தே நடித்திருந்தார். இப்போது இதே ஜோடிதான் தமிழ் ரீமேக்கிலும் நடிக்கிறார்கள்.

நாகேஷின் பேரன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘கல்கண்டு!!!

24th of July 2014
சென்னை:ராட்டினம்’ படத்தைத் தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ் அடுத்ததாக மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ‘கல்கண்டு’. இந்தப்படத்தில் பிரபல நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். 

கதாநாயகியாக டிம்பிள்சோப்டே அறிமுகமாகிறார். மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவர் வீர சிவாஜியின் படைத்தளபதிகளாக பணியாற்றிய பரம்பரையை சேர்ந்தவர்.

இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.எம்.நந்தகுமார். இவர் விஜயகாந்த் நடித்த தென்னவன், பிரஷாந்த் நடித்த ஜாம்பவான் போன்றபடங்களை இயக்கியவர். அத்துடன் ஜப்பான் மொழியில் அங்குள்ள சூப்பர்ஸ்டாரான நம்ரா, நேகாதுபியா, சைனா கதாநாயகியாக கெட்டி ஆகியோர் நடித்து அமோக வெற்றிபெற்ற ‘டான்சிங் வித் நிஞ்ஜா’ என்ற படத்தையும் இயக்கி உள்ளார்.

கல்கண்டு எந்த வடிவத்தில் இருந்தாலும் சுவையில் ஒரு சதவீதம் கூட மாற்றம் இருக்காது. அதுமாதிரி திரைக்கதை வடிவத்தில் இந்த ‘கல்கண்டு’ படமும் சுவையானதாக இருக்கும்” என்கிறார் இயக்குனர் ஏ.எம்.நந்தகுமார்.

Kalkandu Movie Stills

24th of July 2014
சென்னை:Tags : Nagesh Grans Son in Kalkandu New Movie Photos, Actor Kajesh in Kalkandu Latest Movie Gallery, Kalkandu Unseen Movie Pictures, Nagesh Grans Son Gajesh Film Kalkandu images, Kalkandu Movie Hot Stills, Kalkandu Movie New Pics..

























 






Tags : Nagesh Grans Son in Kalkandu New Movie Photos, Actor Kajesh in Kalkandu Latest Movie Gallery, Kalkandu Unseen Movie Pictures, Nagesh Grans Son Gajesh Film Kalkandu images, Kalkandu Movie Hot Stills, Kalkandu Movie New Pics