.

.

Sunday, July 27, 2014

விஜய்க்கு அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டம் கிடைக்குமா?!!!

27th of July 2014
சென்னை:விஜய்க்கு அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டம் வழங்கும் விழா மதுரையில் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள அனைத்து நடிகர்களுக்கும் விஜய் அழைப்பு விடுத்துவருகிறார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த விழாவுக்கு அரசு அனுமதி கிடைக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விழாவுக்கு தடை விதிக்க அரசு தெரிவித்துள்ள காரணமும் தவிர்க்க முடியாதது என்றே தெரிய வந்துள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர போராளிகளுக்கு மரியாதை செலுத்தும் நாளாக நாம் கொண்டாடுகிறோம். 
 
அன்றைய தினத்தில் மாநிலமெங்கும் நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடும் நேரத்தில், விளம்பரத்துக்காக எடுக்கப்படும் இந்த விழாவால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் இந்த விழாவைத் தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளதாம். இதனால் விஜய் மற்றும் விழாக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.

No comments:

Post a Comment