.

.

Thursday, July 24, 2014

நாகேஷின் பேரன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘கல்கண்டு!!!

24th of July 2014
சென்னை:ராட்டினம்’ படத்தைத் தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ் அடுத்ததாக மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ‘கல்கண்டு’. இந்தப்படத்தில் பிரபல நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். 

கதாநாயகியாக டிம்பிள்சோப்டே அறிமுகமாகிறார். மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவர் வீர சிவாஜியின் படைத்தளபதிகளாக பணியாற்றிய பரம்பரையை சேர்ந்தவர்.

இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.எம்.நந்தகுமார். இவர் விஜயகாந்த் நடித்த தென்னவன், பிரஷாந்த் நடித்த ஜாம்பவான் போன்றபடங்களை இயக்கியவர். அத்துடன் ஜப்பான் மொழியில் அங்குள்ள சூப்பர்ஸ்டாரான நம்ரா, நேகாதுபியா, சைனா கதாநாயகியாக கெட்டி ஆகியோர் நடித்து அமோக வெற்றிபெற்ற ‘டான்சிங் வித் நிஞ்ஜா’ என்ற படத்தையும் இயக்கி உள்ளார்.

கல்கண்டு எந்த வடிவத்தில் இருந்தாலும் சுவையில் ஒரு சதவீதம் கூட மாற்றம் இருக்காது. அதுமாதிரி திரைக்கதை வடிவத்தில் இந்த ‘கல்கண்டு’ படமும் சுவையானதாக இருக்கும்” என்கிறார் இயக்குனர் ஏ.எம்.நந்தகுமார்.

No comments:

Post a Comment