.

.

Friday, October 31, 2014

'கொம்பன்' என்னை மனசுல வச்சு எழுதின கதை - கார்த்தி Komban Movie New Pics!!!

31st of October 2014
சென்னை:Tags : Komban New Movie Photos, Komban Latest Movie Gallery, Komban Unseen Movie Pictures, Komban Film Latest images, Komban Movie Hot Stills, Komban Movie New Pics.

மெட்ராஸ்' படத்தின் வெற்றி கார்த்தியை பெரும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த சந்தோஷத்தோட அவருடைய அடுத்தப்படமான கொம்பன் படப்பிடிப்பில் படு பரபரப்பாக இயங்கி வரும் அவர், கொம்பன், படத்தைப் பற்றி நம்மிடம் கூறியதாவது:

அம்மா மட்டுமே வளர்த்த ஒரு பையன் அப்பா மட்டுமே வளர்த்த ஒரு பொண்ணு, இவங்களுக்கு கல்யாணம் ஆகுது. பொதுவா நம்மாளுங்க மாமனாருக்கு செம லந்து குடுப்போம்ல..."என்ன உங்கப்பன் சாப்ட்டானா? மென்னு திங்க சிரமமா இருக்கும்...கறியை மிக்சில அடிச்சு வெச்சிருக்கலாம்ல! வருஷத்துக்கு ஒரு தடவைதானே குளிப்பாங்க உங்க பரம்பரைல!" அப்படி இப்படின்னு கட்டையைக் குடுப்போம். பொண்ணுங்களும் அதைப் போய்க் கோபத்தோடு ரசிப்பாங்க. அப்படிப் பேசிட்டு இருக்கும்போது மாமனாரே வந்து நின்னார்னா, எப்படி இருக்கும்? தர்மசங்கடமும் அசட்டுச் சிரிப்புமா...நம்ம முகம் களைக்கடும்ல, இப்படி எனக்கும் ராஜ்கிரண் சாருக்கும் படம் முழுக்க ரண்டக்க ரண்டக்கதான்!

கொம்பன் என்னை மனசுல வெச்சு எழுதின கதை. ஆட்டு வியாபாரி கொம்பையா பாண்டியனுக்கு பெத்த அம்மா எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு ஊரும் முக்கியம். ஊருக்குள்ள விசேஷமோ, பஞ்சாயத்தோ...முதல் குரல் கொம்பநோடது தான். ஊருக்கு ஒரு புள்ளை, ஊருக்கான புள்ளை, அப்படி ஒரு கதை.

குட்டிப்புலி பண்ண முத்தையா தான் கொம்பன் இயக்குனர். அவர் ஸ்கிரிப்ட் சொன்னப்பவே ராமனாதபுரத்துக்கும், மதுரைக்கும் இவ்வளவு வித்தியாசங்கள் இருக்குதான்னு ஆச்சர்யப்பட்டேன். ஏன்னா, சென்னையில் இருந்து பார்த்தா, தென் தமிழ்நாடு முழுக்க மதுரை மாதிரிதான் தெரியும் நமக்கு. ஆனா, கலாசாரம், வட்டார வழக்கனு மதுரைக்கும் ராமனாதபுரத்துக்கும் ஊருபட்ட வித்தியாசங்கள். கும்மியமா படத்தில் ரொம்ப நல்லவனா நடிக்க வேண்டிய கேரக்டர். சரக்கு, சைட்டிஷ்னே நடிச்சுட்டு இருதுட்டேன். ஆனா, இந்தப் படத்தில் அப்படி எந்த நெகட்டிவ் சேறும் இருக்காது.

கிராமம், குடும்பம், உறவுகளுக்குள் நடக்கும் விஷயங்கள், பங்காளிப் பகைன்னு வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் விஷயங்கள் இருக்கும். நிறைய அன்போடு அந்நியாயமாக இருக்கிற மாமனார் - மருமகன் உறவுதான் மெயின் கதை. பொதுவா மாமனார் - மருமகன் இடையிலான பாச நேசம், தமிழ் சினிமாவில் பெருசா பேசப்பட்டது இல்லை. இத்தனைக்கும் அவங்க ரொம்பப் பாசமா இருப்பாங்க. ஆனாலும் ஏதோ ஒரு சங்கடம் அவங்களுக்குள் இருக்கும். அந்த அன்பையும் மரியாதையையும் ரொம்ப இயல்பா கொண்டு வந்திருக்கோம். சிலர் கிட்ட நல்ல கதை இருக்கும். ஆனா, அதை அவங்க எப்படி எடுப்பாங்கன்னு நமக்குப் பயமா இருக்கும். முத்தையாகிட்ட நல்ல கதைகளும் இருக்கு, அதை அச்சு அசலா அப்படியே பிரசன்ட் பண்றார். அதுதான் இந்த சப்ஜெக்ட்டின் பலம்.

நான், என் ராசாவின் மனசிலே படம் பார்த்துட்டு ராஜ்கிரண் நேரிலும் அப்படித்தான் இருப்பார்னு மிரண்டுட்டு இருந்தவன். இப்போ அவரே ஸ்பாட்ல என்னைப் பார்த்து, உங்களுக்கு இந்தக் கிராமத்து கேரக்டர்லாம் நல்லா பொருந்துது தம்பின்னு சொல்றார். விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்னு ஒரு சினிமாவின் மொத்த பயணத்தையும் புரிச்சு வெச்சிருக்கிறவர் கிட்ட இருந்து வர்ற வார்த்தைகள், அவ்வளோ சந்தோஷம் கொடுத்துச்சு.

படத்தில் லட்சுமி மேனன் கேரட்கர் பெயர் பழனி. இந்த இடத்தில் ஒரு பார்வை பாத்தாலே போதும்னு சொன்னா, கரெக்டா புரிச்சிக்கிட்டு செம ஷார்ப்பா பண்ணிடுறாங்க. அவங்க இடத்தில் வெற யார் நடிச்சிருந்தாலும் இது சினிமான்னு ஞாபகம் வந்திருக்குமோன்னு தோணுது. அவ்வளவு நல்லா பெர்ஃபாரம்  பண்ணியிருக்காங்க.

Tuesday, October 28, 2014

Raai Lakshmi Unseen Photos!!!






28th of October 2014சென்னை:Tags : Raai Lakshmi New Spicy Stills, Raai Lakshmi Actress Latest images, Raai Lakshmi New Hot Gallery, Raai Lakshmi Unseen Photoshoot, Raai Lakshmi Actress New Pictures, Raai Lakshmi Latest Photos, Raai Lakshmi Hot Pics in Saree.

படப்பிடிப்பு அரங்கில் நடிகை ரியாகானை கற்பழிக்க முயற்சி!!!

28th of October 2014
சென்னை:இந்தி நடிகை ரியாகானை படப்பிடிப்பு அரங்கில் கற்பழிக்க முயற்சி நடந்தது. இச்சம்பவம் மும்பை பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரியாகான் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பெரிய ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். மும்பையில் ரியாகான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக நடித்து வந்தார்.

இரு தினங்களுக்கு முன் தான் நடிக்க வேண்டிய காட்சிகளை நடித்து முடித்து விட்டு படப்பிடிப்பு அரங்கில் ஓரமாக உட்கார்ந்து இருந்தார். படக்குழுவினர் வேறு காட்சிகள் எடுப்பதற்காக இன்னொரு

அப்போது அங்கு வந்த தயாரிப்பு நிர்வாகி, ரியாகான் தனியாக இருப்பதை பார்த்ததும் சபலப்பட்டார். அவரை வாயை பொத்தி கற்பழிக்க முயன்றார். ரியாகான் ஆவேசமாக அந்த நபரை அடித்து தள்ளி விட்டு வெளியே ஓடி விட்டார்.

இதுகுறித்து போலீசில் அவர் புகார் செய்யவில்லை. ஆனால் தயாரிப்பாளரிடம் புகார் கூறினார். இதையடுத்து தயாரிப்பு நிர்வாகியை வரவழைத்து கடுமையாக கண்டித்தனர். படப்பிடிப்பில் இருந்து அவரை வெளியேற்றியும் விட்டனர்.

தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இந்த விஷயம் வெளியே கசிந்துள்ளது. மும்பை பட உலகில் எல்லோரும் இதுபற்றியே பேசுகிறார்கள்.
இடத்துக்கு சென்று விட்டனர். ரியாகான் மட்டும் தனியாக இருந்தார்.

Monday, October 27, 2014

வடிவேலு நடிக்கும் எலி நவம்பரில் தொடக்கம்!!!

27th of October 2014
சென்னை:வடிவேலு, நீண்ட இடைவெளிக்குப்பிறகு ‘தெனாலிராமன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி ஆனார். இப்படத்தை யுவராஜ் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு ‘எலி’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறாராம். இப்படத்தையும் யுவராஜே இயக்குகிறார். 

இப்படத்தை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதை எழுதும் பணியை இயக்குனர் யுவராஜ் முடித்துவிட்டார். இந்த கதை வடிவேலுக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டதாம். வடிவேலு இந்த படத்தில் உளவாளியாக நடிக்கிறாராம். 1960-களில் நடக்கும் கதையாக உருவாகவிருக்கிறது. முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கவுள்ளனர். தற்போது, வடிவேலுவுக்கு கதாநாயகி தேடும் பணி நடக்கிறது. மற்றும் பிற நடிகர், நடிகையர் தேர்வும் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை ஓஹோ பிக்சர்ஸ் சார்பில் ஜி.ராம்குமார் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். தோட்டா தரணி கலையையும், ராஜா முகம்மது எடிட்டிங்கையும் கவனிக்கிறார்கள்.

Friday, October 24, 2014

நயன்தாராவே ஆடிட்டார்.. பூர்ணா ஆடமாட்டாரா..?!!!

24th of October 2014
சென்னை:இதுவும் ஒரு பாட்டுக்கு ஆடக்கூடிய இன்னொரு நடிகையின் டான்ஸ் சமாச்சாரம் தான்..  ‘தகராறு’ படத்தில் வில்லித்தனம் காட்டிய பூர்ணா, சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துவரும் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடவேண்டும் என கேட்டதும் எந்தவித தகராறும் பன்னாமல்டக்கேன்று ஒத்துக்கொண்டாராம்.

படத்தின் கதாநாயகிகளாக ஏற்கனவே த்ரிஷா, அஞ்சலி என இரண்டுபேர் இருக்கிறார்கள். ஆனால் ஹீரோ அறிமுகமாகும் திருவிழா பாடலில் நன்கு ஆடத்தெரிந்த ஒரு நடிகையாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்த சுராஜ் பூர்ணாவை புக் பண்ணிவிட்டாராம். நயன்தாராவே ஒரு பாட்டுக்கு ஆடிவிட்டார்.. பூர்ணா மட்டும் மாட்டேன் என்றா சொல்லிவிடப்போகிறார்.

பயம் காட்டும் அருள்நிதி!!!

24th of October 2014
சென்னை:தகராறு’, ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ என மீடியம் ஹிட்டுகளை கொடுத்த கையோடு   ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என்ற படத்திலும் நடித்து முடித்துவிட்டார் அருள்நிதி. அறிமுக இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

லியோ விஷன் ராஜ்குமார் தயாரித்துள்ள இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து அடுத்தாக ஒரு இன்னும் பெயரிடப்படாத ஒரு திகில் படத்தில் நடிக்கிறார் அருள்நிதி. இந்தமாத இறுதியில் தொடங்கவிருக்கும் இந்தப்படத்தை அஜய் என்பவர் இயக்குகிறார். ஆக்ஷன், காமெடியில் இருந்து திகிலுக்கு மாறும் அருள்நிதி பயம் காட்டுவாரா என பார்க்கலாம்.

Tuesday, October 21, 2014

பாதுகாப்பு வேண்டும் - கதறும் ‘கத்தி’ பட தயாரிப்பாளர்!!!

21st of October 2014
சென்னை:கத்தி’ படம் திரையிட்ட தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி போலீஸ் கமிஷனரிடம் தயாரிப்பாளர் கருணாமூர்த்தி மனு கொடுத்தார்.

விஜய், சமந்தா ஜோடியாக நடித்த படம் ‘கத்தி’. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் மற்றும் ஐங்கரன் கருணமூர்த்தி தயாரித்து உள்ள இப்படம், தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கத்தி படத்துக்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சுபாஷ்கரன் நெருக்கமாக இருக்கிறார் என்று குற்றம்சாட்டின. எனவே கத்தி படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்று கண்டித்தனர்.

எதிர்ப்பை மீறி ‘கத்தி’ படத்தை நாளை மறுநாள் (22–ந்தேதி) தீபாவளியன்று ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.

இதற்கிடையில் ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கருணாமூர்த்தி நேற்று கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். ‘கத்தி’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தார்.

இன்னொரு புறம் எதிர்ப்பாளர்களுக்கும், தயாரிப்பு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

Monday, October 20, 2014

தங்கைக்காக சமிதாப் படத்தில் ஸ்ருதி ஹாசன்!!!

20th of October 2014
சென்னை:உலகநாயகன் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் ஹிந்தியில் அமிதாப் பச்சன் , தனுஷ், ரேகா நடிக்கும் சமிதாப் என்ற படத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தை பால்கி இயக்கி வருகிறார் .

கமல் ஹாசனின்  மூத்த மக
ள் ஸ்ருதிஹாசன் முறைப்படி ஹிந்துஸ்தானி இசையை கற்றுயிருப்பவர்.

இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்க ஸ்ருதிஹாசன் தன் தங்கை   அக்ஷரா ஹாசனுக்காக இப்படத்தில்  ஒரு பாடல் பாடுகிறாராம்.
ஸ்ருதி ஹிந்தியில் பாடுவது இது இரண்டாவது முறை என்பது  கூறிபிடதக்கது.

Sunday, October 19, 2014

விஜயகாந்த் வாரிசுக்காக சிம்பு பாடிய பாட்டு!!!

19th of October 2014
சென்னை:விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் ‘சகாப்தம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். கடந்த சில மாதங்களுக்குப் முன்பு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையில், இப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை நடிகர் சிம்பு பாடியுள்ளார். ‘பம்பரக்காண்ணாலே’ படத்தின் இயக்குநர் பாரதி பாஸ்கர் எழுதியுள்ள இப்பாடல், சிம்புவின் குரலில் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

விஜயகாந்தின் மைதுனரும், ‘சகாப்தம்’ படத்தின் தயாரிப்பாளருமான எல்.கே.சுதீஷின் நட்புக்காக சிம்பு இப்பாடலை பாடிக் கொடுத்தாராம்.

ராணா - திரிஷா காதல் முறிந்து விட்டதா? தெலுங்கு பட உலகில் பரபரப்பு!

19th of October 2014
சென்னை:தெலுங்கு நடிகர் ராணா – திரிஷா காதல் முறிந்து விட்டதாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவி உள்ளது.
இருவரும் கடந்த சில மாதங்களாக தீவிரமாக காதலித்தனர். பட விழாக்களுக்கு ஜோடியாக வந்தார்கள். வெளிநாடுகளில் நடந்த பட விழாக்களுக்கும் ஒன்றாகவே சென்றார்கள்.
சமீபத்தில் மலேசியாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் கணவன் – மனைவி போல ஜோடியாக பங்கேற்றார்கள். அருகருகே உட்கார்ந்து சிரித்து பேசிக் கொண்டும் இருந்தனர்.

இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து இருக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

பின்னர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் அடுத்த வருடம் திருமணம் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இருவருக்கும் நெருக்கமானவர்களும் இதை உறுதி செய்தனர்.

காதல் முறிவுக்கு காரணம் ராணாவின் நடவடிக்கைகள்தான் என்று கூறப்படுகிறது. திரிஷாவை போல் ராணா நிறைய பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்தாராம்.

திரிஷாவுக்கு தெரியாமல் அந்த பெண்களுடன் ஓட்டல், விருந்து என சுற்றியுள்ளார். வெளிநாடுகளுக்கும் அழைத்து போனாராம். இதை திரிஷாவிடம் யாரோ ஒருவர் போட்டுக் கொடுத்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்தார். ராணா உடன் சண்டை போட்டாராம். பிறகு காதலையும் முறித்துக் கொண்டு விட்டார். இப்போது சினிமாவிலேயே முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வருகிறாராம். 2 படங்கள். 2600 தியேட்டர்கள். இதுவரை இல்லாத பிரமாண்டம்

Friday, October 17, 2014

சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் படத்தில் அஜீத்துடன் ஜோடி சேரும் ஹன்சிகா?

17th of October 2014
சென்னை:அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கிவரும் தல55 படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களுடன் விவேக், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இதன் படப்பிடிப்பு ஆந்திராவில் செட் அமைத்து கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. பொங்கலுக்கு முன்னதாகவே இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தையடுத்து அஜீத் ‘வீரம்’ படத்தை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அஜீத்துக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்குமுன் அஜீத் ஜோடியாக வித்யாபாலன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்தன. அதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

Wednesday, October 15, 2014

அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் நடைபெறும் 'ஐ' பட பிரிமீயர் காட்சிகள்!!!

15th of October 2014
சென்னை:ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'ஐ' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தீபாவளியன்று வெளியாவதாக இருந்த படம், பணிகள் முடிவடையாததால், அடுத்த மாதம் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

வெளியீட்டு தேதி தள்ளிப் போனாலும், படம் குறித்த பரபரப்பை மற்றும் குறையாமல் இருக்க அவ்வபோது, பல பிரம்மாண்ட ஏற்பாடுகளை தயாரிப்பு தரப்பில் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், ஐ படத்தின் பிரிமியர் காட்சிகள் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் இசை வெளியீட்டு எப்படி ஹாலிவுட் நடிகர் அர்னால்டை வரவைத்தார்களோ, அதே போல பிரிமியர் காட்சியிலும் பல்வேறு ஹாலிவுட் நடிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்களாம். இதில் முக்கியமானவர் ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலன். இவர் இரு நாடுகளில் நடைபெறும் ஏதாவது ஒரு பிரீமியர் காட்சியில் கலந்துகொள்வதாக உறுதியளித்துள்ளாராம்.

கிளாமர் சர்ச்சையில் இருந்து விடுபட அளவுகோல்: ஸ்ருதிஹாசன்!!!

15th of October 2014
சென்னை:சினிமாவுக்கு வந்து குறுகிய காலத்திலேயே பரபரப்பான நடிகையாகி விட்டார் ஸ்ருதிஹாசன். இதற்கு காரணம் படத்துக்குப்படம் அவர் காண்பித்து நடித்த கிளாமர்தான். அதன்காரணமாக அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிய ஸ்ருதிஹாசன், தமிழைப் பொறுத்தவரை அடக்கியே வாசித்து வருகிறார். 3, ஏழாம் அறிவு படங்களைத் தொடர்ந்து இப்போது விஷாலுடன் நடித்துள்ள பூஜையிலும் பெரிய அளவில் அவர் வெடித்து சிதறவில்லை என்றே கூறப்படுகிறது.

அதனால் இந்தி, தெலுங்கு படங்களில் வாரி வழங்கும் நீங்கள் தமிழுக்கு மட்டும் எதற்காக துரோகம் செய்கிறீர்கள்? என்று அவரைக்கேட்டால், நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது நானல்ல. கதைதான். அப்படித்தான் இதுவரை நடித்து வருகிறேன். அந்த வகையில், இந்தி, தெலுங்கில் பக்கா கமர்சியல் கதைகளாக எனக்கு கிடைத்து வருகின்றன. அதனால் அதற்கேற்ப நான் மாறி நடிக்கிறேன்.

மற்றபடி தமிழ் ரசிகர்களுக்கு துரோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கில்லை. மேலும், கடந்த காலங்களில் சில படங்களில் கிளாமரில் நான் ஓவர்டோஸ் கொடுத்து விட்டதாக புகார்கள் எழுந்தன. அதனால் இனிமேற்கொண்டு ஒரு ஸ்கேல் வைத்தே நடிக்க முடிவு செய்திருக்கிறேன். சர்ச்சைகள், அதிருப்தியில் இருந்து விடுபட்டு அனைவரும் விரும்பும் நடிகையாக மாற வேண்டும் என்பதே எனது இப்போதைய எண்ணமாக உள்ளது என்று கூறும் ஸ்ருதிஹாசன், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தியிலும் இந்த அளவுகோலை கடைபிடிக்கப் போவதாகவும் சொல்கிறார்.

Tuesday, October 14, 2014

சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக நடிகை நளினி!!!

14th of October 2014
சென்னை:சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக நடிகை நளினி வெற்றி பெற்றுள்ளார்.

சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நடிகை நளினி, நடிகர்கள் ராஜேந்திரன், சிவசீனிவாசன் ஆகியோர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட்டன.

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக திரைப்பட வசனகர்த்தா லியாஸ் அலிகான் செயல்பட்டார். மொத்தமுள்ள 1,300 வாக்குகளில் 700-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.

மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 8 சுற்றுகள் கொண்ட வாக்குப் எண்ணிக்கையின் தொடக்கம் முதலே நடிகை நளினி முன்னிலையில் இருந்தார். இறுதியில் 273 வாக்குள் பெற்று நடிகை நளினி வெற்றி பெற்றார்.

துணைத் தலைவர், செயலாளர், செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

ரஜினி-சோனாக்‌ஷி பங்குபெறும் டூயட் பாடல் ஐதராபாத்தில் படமாக்கப்படுகிறது!!!

14th of October 2014
சென்னை:லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில், இன்னும் இரண்டு பாடல்களை மட்டும் படமாக வேண்டி உள்ளதாம்.அதில் ஒன்று ரஜினிபங்கேற்கும் ஓப்பனிங் பாடல். இன்னொன்று சோனாக்ஷி சின்ஹாவுடனான டூயட். ரஜினி பங்கேற்கும் ஓப்பனிங் பாடலை வெளிநாடுகளுக்குச் சென்று படமாக்க திட்டமிட்டுள்ளனர். ஹாங்காங், மக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் படம்பிடிக்க உள்ளார்களாம். 

இதற்காக தீபாவளி பண்டிகைக்கு பிறகு வெளிநாடு போக திட்டமிட்டுள்ள படக்குழுவினர், அதற்கு முன்பாக ரஜினி-சோனாக்‌ஷி பங்குபெறும் டூயட் பாடலை படமாக்க திட்டமிட்டுள்ளனர். ஐதராபாத்தில் படமாகவுள்ள இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது.

Sunday, October 12, 2014

மும்பையை சேர்ந்த நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கும் ராய் லக்ஷ்மி!!!

12th of October 2014
சென்னை:மும்பையை சேர்ந்த ஏ.எஸ்.ஏ நிறுவனம், தமிழில் பிரம்மாண்ட செலவில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளது.

பிரபல நடிகையான ராய் லக்ஷ்மி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மலையாளத்தில் மம்முட்டியுடன் ராஜாதிராஜா, தமிழில் சுந்தர் சி யுடன் 'அரண்மனை'  என இந்த வருடம் ஹிட் படங்களில் நடித்துள்ள ராய் லக்ஷ்மி, பல ரசிகர்களின் மனதை வென்றுள்ளார் என்றால் அதி மிகையாகாது.

பல மலையாள வெற்றி படங்களில் நடித்ததின் மூலம் மாலிவுட்டில் “லக்கி” ராய் என அழைக்கப்படும் ராய் லக்ஷ்மி, அரண்மனையில் தனது எதார்த்தமான நடிப்பால் அனைவரின் பாராட்டை பெற்றார். இப்படத்திற்கு அவர் ஒரு பெரிய பலமாக திகழ்வார்.

இன்னும் பெயரிடபடாத இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

Thursday, October 9, 2014

சாந்தினி நடிக்கும் 'போர்குதிரை!!!

9th of October 2014
சென்னை:சித்து பிளஸ் 2, நான் ராஜாவாக போகிறேன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த சாந்தினி மீண்டும் கதாநாயகியாக பிரவேசம் செய்யும்  படம் 'போர்குதிரை'.அறிமுக இயக்குனர் சாய் பிரவீன் இயக்கும் 'போர்குதிரை' 80 களில் உள்ள காதலையும் உணர்வையும் படம் பிடித்துக் காட்டும்  படம். இந்த மண்ணின் மணத்தையும் , குணத்தையும் படம் பிடித்துக் காட்டும் படம் .

போர் குதிரை 'உசிலம்பட்டியை ஒட்டிய பகுதிகளில் பெருமளவுக்கு படமாக்கபட்ட படம். இந்த படத்தின் ஜீவ நாடியே படத்தின் நாயகி தான். சாந்தினி , தனது உன்னத நடிப்பால் அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் தந்து  இருக்கிறார். தமிழ் வசனங்களை அட்சரம் பிசகாமல் அவர் உச்சரித்தது ஒரு இயக்குனராக என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆற்றுகிறது. 

ஒரு காட்சி படமாக்கப்படும் போது மற்றவர்களுக்கு சரி என்று பட்டாலும் இன்னமும் நல்லா பண்ணி இருக்கலாம் இல்ல சார் , என்று கேட்பதே அவர் இன்னமும் உயர்ந்த  நிலைக்கு வருவார் என்பதற்கு சான்று. 'போர்குதிரை' படத்தில் அவரது கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும் ' என்றுக்  கூறினார் இயக்குனர் சாய் பிரவீன்.

மணிரத்னம் படத்தில் ஒப்பந்தமான பிரகாஷ்ராஜ்!!!

9th of October 2014
சென்னை:கடல்' படத்திற்குப் பிறகு இயக்குனர் மணிரத்னம், மம்முட்டியும் மகன் துல்கர் சல்மானை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

இதற்கிடையில், இப்படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே மணிரத்னத்தின்   ‘பாம்பாய்’, ‘இருவர்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ ஆகிய படங்களில் நடித்துள்ள பிரகாஷ்ராஜுக்கு இது மணிரத்னத்துடன் நான்காவது படமாகும்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள  பிரகாஷ் ராஜ், "சூப்பர் சூப்பர், மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். எனது கேரக்டரையும், கதையையும் மணிரத்னம் எனக்கு விளக்கினார்." என்று தெரிவித்துள்ளார்.

அஜித் படத்தில் கமல்ஹாசன்!!!

9th of October 2014
சென்னை:கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் படத்தில் கமல்ஹாசன் இடம்பெறப் போகிறார். ஆனால், நடிகராக அல்ல, பின்னணி குரல் கொடுப்பவராக.

ஆம், எப்போதும் தான் இயக்கம் படங்களில் ஏதாவது காட்சிகளுக்கு பின்னணியில் குரல் கொடுப்பது போல இருந்தால், அதற்கு தனது குரலையே பயன்படத்தி வந்த இயக்குனர் கெளதம் மேனன், இந்த படத்தில் வெறு யாரையாவது குரல் கொடுக்க முடிவு செய்தாராம். அதுவும் அந்த குரல் ரொம்ப பிரபலமான குரலாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியவர், இதற்காக கமல்ஹாசன் குரலை தேர்வு செய்துள்ளாராம்.

இது குறித்து கமல்ஹாசனின் கூறி,  அவருடைய சம்மதத்தை பெறும் முயற்சியில் இறங்கியுள்ள கெளதம் மேனன், 'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமல்ஹாசனுடன் பணியாற்றியுள்லதால், அவர் தனது இந்த விருப்பத்தை ஏற்றுக்கொள்வார், என்ற நம்பிக்கையில் உள்ளாராம்.

Monday, October 6, 2014

Poojai Movie Stills!!!

6th of October 2014
சென்னை:Tags : Poojai New Movie Photos, Poojai Latest Movie Gallery, Poojai Unseen Movie Pictures, Poojai Film Latest images, Poojai Movie Hot Stills, Poojai Movie New Pics.