சென்னை:கத்தி’ படம் திரையிட்ட தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று
கோரி போலீஸ் கமிஷனரிடம் தயாரிப்பாளர் கருணாமூர்த்தி மனு கொடுத்தார்.
விஜய், சமந்தா ஜோடியாக நடித்த படம் ‘கத்தி’. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் மற்றும் ஐங்கரன் கருணமூர்த்தி தயாரித்து உள்ள இப்படம், தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கத்தி படத்துக்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சுபாஷ்கரன் நெருக்கமாக இருக்கிறார் என்று குற்றம்சாட்டின. எனவே கத்தி படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்று கண்டித்தனர்.
எதிர்ப்பை மீறி ‘கத்தி’ படத்தை நாளை மறுநாள் (22–ந்தேதி) தீபாவளியன்று ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.
இதற்கிடையில் ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கருணாமூர்த்தி நேற்று கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். ‘கத்தி’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தார்.
இன்னொரு புறம் எதிர்ப்பாளர்களுக்கும், தயாரிப்பு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
விஜய், சமந்தா ஜோடியாக நடித்த படம் ‘கத்தி’. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் மற்றும் ஐங்கரன் கருணமூர்த்தி தயாரித்து உள்ள இப்படம், தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கத்தி படத்துக்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சுபாஷ்கரன் நெருக்கமாக இருக்கிறார் என்று குற்றம்சாட்டின. எனவே கத்தி படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்று கண்டித்தனர்.
எதிர்ப்பை மீறி ‘கத்தி’ படத்தை நாளை மறுநாள் (22–ந்தேதி) தீபாவளியன்று ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.
இதற்கிடையில் ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கருணாமூர்த்தி நேற்று கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். ‘கத்தி’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தார்.
இன்னொரு புறம் எதிர்ப்பாளர்களுக்கும், தயாரிப்பு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
No comments:
Post a Comment