.

.

Thursday, October 9, 2014

மணிரத்னம் படத்தில் ஒப்பந்தமான பிரகாஷ்ராஜ்!!!

9th of October 2014
சென்னை:கடல்' படத்திற்குப் பிறகு இயக்குனர் மணிரத்னம், மம்முட்டியும் மகன் துல்கர் சல்மானை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

இதற்கிடையில், இப்படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே மணிரத்னத்தின்   ‘பாம்பாய்’, ‘இருவர்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ ஆகிய படங்களில் நடித்துள்ள பிரகாஷ்ராஜுக்கு இது மணிரத்னத்துடன் நான்காவது படமாகும்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள  பிரகாஷ் ராஜ், "சூப்பர் சூப்பர், மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். எனது கேரக்டரையும், கதையையும் மணிரத்னம் எனக்கு விளக்கினார்." என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment