.

.

Thursday, October 2, 2014

சமந்தாகூட நடிக்கணும்’: புதுமுக நாயகனின் ஆசை!!!

2nd of October 2014
சென்னை:சிக்கிமுக்கி, தலக்கோணம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்திப்பவர் ஜிதேஷ்.

இவர், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்தவர். சில திரைப்படங்களிலும் நடனமாடியிருக்கிறார். அஜித் நடித்த ஏகன் படத்திலும், ஆர்யா நடித்த கலாபக் காதலன் படத்திலும்
நடனமாடியிருக்கிறார். அதோடு சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். நார்வேயில் இவர் நடித்த ஒரு நாடகத்தை பார்த்து விட்டு இவரை சிக்கி முக்கி படத்திற்கு புக் பண்ணினார்கள்.

அந்த படத்தையடுத்து தலக்கோணம் படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் தற்போது திரைக்கு வந்திருக்கிறது. இந்த படத்தில் ஜிதேஷின் நடிப்பைப் பார்த்து விட்டு எதிர்பார்த்ததை விட நன்றாக நடித்திருப்பதாக அப்பட இயக்குனர் பாராட்டினார். இது குறித்து ஜிதேஷ் கூறும்போது, பெரிய இயக்குனர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆர்வமாக இருக்கேன்.

முதல் இரண்டு படங்களிலும் புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடித்து எனது நடிப்பு திறமையை ஓரளவு வளர்த்துக்கொண்டேன். மேலும் சமந்தா மாதிரி முன்னணி ஹீரோயின்களோடவும் நடிக்கணும். தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்துக்கு வரணும்னு ஆசைப்படறேன். இந்த நியாயமான என்னோட ஆசைகள் இந்த வருஷம் நிறைவேறிரும்னு நான் நிச்சயமாக நம்புறேன். தற்போது அடுத்த படத்துக்காக தீவிரமா கதை கேட்டுக்கிட்டிருக்கேன் என்றார்.

No comments:

Post a Comment