சென்னை:விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் ‘சகாப்தம்’ படத்தின் மூலம் நாயகனாக
அறிமுகமாகிறார். கடந்த சில மாதங்களுக்குப் முன்பு தொடங்கப்பட்ட
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையில், இப்படத்தில் இடம்பெறும்
பாடல் ஒன்றை நடிகர் சிம்பு பாடியுள்ளார். ‘பம்பரக்காண்ணாலே’ படத்தின்
இயக்குநர் பாரதி பாஸ்கர் எழுதியுள்ள இப்பாடல், சிம்புவின் குரலில்
சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
விஜயகாந்தின் மைதுனரும், ‘சகாப்தம்’ படத்தின் தயாரிப்பாளருமான எல்.கே.சுதீஷின் நட்புக்காக சிம்பு இப்பாடலை பாடிக் கொடுத்தாராம்.
No comments:
Post a Comment