.

.

Friday, June 5, 2015

த்ரிஷா, அஞ்சலியுடன் தாய்லாந்து பறந்த ஜெயம் ரவி!!!

5th of June 2015
சென்னை:அலெக்ஸ்பாண்டியன்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘அப்பாடக்கர்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் சுராஜ். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க, த்ரிஷா, அஞ்சலி என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, விவேக், அஸ்வின் ராஜா, ராஜே
ந்திரன், பூர்ணா (சிறப்புத் தோற்றம்) ஆகியோரும் நடிக்கிறார்கள். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் எஸ்.எஸ்.தமன்.

‘டாக்கி போர்ஷனு’க்கான படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்போது பாடல்களுக்கான படப்பிடிப்புத் துவங்கியுள்ளது. ‘சதிகாரி...’ எனத் தொடங்கும் பாடல் படப்பிடிப்பு ஒன்றிற்காக தற்போது தாய்லாந்தில் முகாமிட்டுள்ளது ‘அப்பாடக்கர்’ டீம். இயக்குனர் சுராஜ், ஜெயம் ரவி ஆகியோருடன் அஞ்சலியும், த்ரிஷாவும் தாய்லாந்தில் இருக்கிறார்களாம். தற்போது அங்கு ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக ஜெயம் ரவி ட்வீட் செய்துள்ளார்.

No comments:

Post a Comment