.

.

Monday, November 10, 2014

இயக்குனர் அட்லி - நடிகை ப்ரியா திருமணம் - சென்னையில் நடந்தது!!!

 10th of November 2014
 சென்னை:ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடித்த 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லி, தனது முதல் படத்திலையே பெரும் வெற்றி பெற்று முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இடம் பிடித்தார்.

இவருக்கும் நடிகை பிரியாவுக்கும் காதல் மலர்ந்தது. பிரியா கனாகாணும் காலங்கள். டி.வி. தொடரில் நடித்தார். சூர்யாவுடன் ‘சிங்கம்’, ‘சிங்கம்–2’, கார்த்தியின் ‘நான் மகான் அல்ல’ படங்களில் நடித்து உள்ளார்.

அட்லி–பிரியா இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதற்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதித்தனர்.

அட்லி–பிரியா திருமணம் இன்று காலை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

இயக்குனர் ஷங்கர்  தாலியை ஆசீர்வதித்து கொடுக்க அட்லி மணப்பெண் பிரியா கழுத்தில் கட்டினார்.

திரையுலகினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், நந்தா, நாசர், டைரக்டர்கள் பாலா, சசிகுமார், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ஏ.எம்.ரத்தினம், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட பலர் நேரில் வாழ்த்தினார்கள்.

அதே ஹோட்டலில்  திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

No comments:

Post a Comment