சென்னை:தெலுங்கில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாக சைதன்யா என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை வைத்து ‘மனம்’ படத்தை இயக்கி, அதை மாபெரும் வெற்றிப்படமாக்கிய விக்ரம் கே.குமார் இப்போது சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் தனது அடுத்த படத்தின் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார்.
படத்தின் பெயர் ‘24’. ஆம் வெறும் நம்பர் மட்டும் தான் டைட்டிலே.. சூர்யாவின் பட டைட்டில்களில் இது வித்தியாசமானதுதான். ஆனால் ஏற்கனவே தான் இயக்கிய படத்திற்கு ’13B’ என நம்பரில் டைட்டில் வைத்தவர் தானே விக்ரம் கே.குமார். அதனால் பெரிதாக ஆச்சர்யப்பட தேவையில்லை.
இந்தப்படத்திற்கு இசையமைப்பவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தையடுத்து இரண்டாவது முறையாக சூர்யா நடிக்கும் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஒளிப்பதிவாளராக வினோத்குமாரும் ஆர்ட் டைரக்டராக ராஜீவனும் பணியாற்ற இருக்கிறார்கள். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப்படத்தை சூர்யாவின் ‘2டி என்டர்டெயிண்மென்ட்’ நிறுவனமே தயாரிக்கிறது.
No comments:
Post a Comment