சென்னை:நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை
சந்திரசேகர் ஆகியோர், மத்திய அரசின் விருது பெறும் ரஜினிகாந்துக்கு
வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:-
இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவையொட்டி, கோவாவில் நடைபெற இருக்கும்
சர்வதேச திரைப்பட விழாவில், தங்களுக்கு “இந்த ஆண்டின் சிறந்த திரையுலக
பிரபலம்’ என்ற விருதினை மத்திய அரசு வழங்க உள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி
அடைந்தோம்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் அனைத்து
உறுப்பினர்கள் சார்பாகவும் எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment