.

.

Thursday, January 29, 2015

சமூக பொறுப்பு உள்ளவர் அஜித்: இயக்குனர் சரண்!!!

29th of January 2015
சென்னை:காதல் மன்னன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சரண். இதில் அஜித் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் வெற்றியடைந்ததையடுத்து இவர்கள் கூட்டணியில் ‘அமர்க்களம்’ படம் உருவானது. இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இயக்குனர் சரணுக்கும், அஜித்துக்கும் உள்ள நட்பு அனைவருக்கும் தெரிந்த விஷயம். சரண் எப்போதும் அஜித்தை பற்றி பேசுவார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனக்கு மிகவும் பிடித்த அஜித்தை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். அவர் கூறியதாவது:-

அஜித்தின் இமேஜ் ஒரு சூப்பர் ஹீரோ போன்று இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. அவரது தொழிலையும் தாண்டி அனைவராலும் மதிக்கப்படும் நிலைக்கு அவர் ஏற்கனவே வளர்ந்துவிட்டார். ஒரு குடிமகன் என்ற முறையில் அவர் சமூக பொறுப்புடையவர். எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தி வருகிறார். தமிழ் நாட்டின் அடையாளம் என்றே அஜித்தை கூறலாம். இவ்வாறு கூறினார்.

சரண் தற்போது ‘ஆயிரத்தில் இருவர்’ என்னும் படத்தை இயக்கி வருகிறார். இதில் வினய் கதாநாயகனாக நடித்து வருகிறார். பரத்வாஜ் இசையமைக்கிறார். இப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

No comments:

Post a Comment