.

.

Thursday, January 29, 2015

திருப்பதியில் நடிகர் அஜித் சாமி தரிசனம்!!!

29th of January 2015
சென்னை:நடிகர் அஜித், திருப்பதி கோயிலுக்கு சென்று எழுமலையானை தரிசித்து விட்டு திரும்பியிருக்கிறார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ‘என்னை அறிந்தால்’. இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்தது. ஆனால் பொங்கலிலிருந்து ஜனவரி 29ம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தனர்.

பிறகு அந்த தேதியையும் மாற்றி சில தினங்களுக்கு முன் என்னை அறிந்தால் படத்தை பிப்ரவரி 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். படம் ரிலீஸுக்கு இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில் நடிகர் அஜித் இன்று காலை திருப்பதி கோயிலுக்கு சென்று எழுமலையானை தரிசனம் செய்துள்ளார். அவரை கோயில் அதிகாரிகள் வரவேற்று பிரசாதங்கள் வழங்கினர்.

கோயிலுக்கு அஜித் வந்திருப்பதை தெரிந்துகொண்ட ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இப்படம் ரிலீஸான கையோடு அஜித், வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment