.

.

Sunday, January 25, 2015

தெருவோர டாஸ்மாக்கில் பீர் வாங்கிய நயன்தாரா: வீடியோவால் பரபரப்பு!!!



25th of January 2015
சென்னை:தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா, அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது சர்வ சாதரணம். நயன்தாரா தற்போது உதயநிதியுடன் நண்பேண்டா படத்திலும், சிம்பு ஜோடியாக இது நம்ம ஆளு படத்திலும் நடிக்கிறார்.

சூர்யாவுடன் மாஸ், ஜெயம் ரவியுடன் தனி ஒருவன், விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடிதான் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக பாஸ்கர் தராங்கல் படத்தில் நடிக்கிறார். இவற்றில் நண்பேண்டா, இது நம்ம ஆளு படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகின்றன.

தற்போது இவர் ஒரு தெருவோர டாஸ்மாக் மதுக்கடையில் பீர் வாங்குவது போல் ஒரு வீடியோவில் பதிவாகியுள்ளது. மதுக்கடையில் நயன்தாரா, பீர் வாங்குவது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மதுக்கடைக்கு போய் பீர் பாட்டில் வாங்கும் படங்கள் இன்டர்நெட்டிலும், வாட்ஸ் அப்களிலும் பரவி வருகிறது. மதுக்கடையில் நிஜமாகவே பீர் வாங்கினாரா அல்லது படப்பிடிப்பில் இந்த காட்சி படமாக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment