.

.

Sunday, February 1, 2015

தனுஷுடன் கைகோர்த்த பிரபு சாலமன்!!!

1st of February 2015
சென்னை:மைனா, கும்கி, கயல் என்று தொடர்ந்து புதுமுகங்களை வைத்து இயக்கி வந்த பிரபு சாலமன், தற்போது முன்னணி நடிகர் ஒருவருடன் இணைய இருக்கிறார்.

தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் தனுஷ், அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்திலும், வேல்ராஜ் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையில் அவர் பிரபு சாலமன் இயக்கும் படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான நாயகி மற்றும் பிற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
’கயல்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இயக்குநர் பிரபு சாலமன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் தனுஷ் நடிப்ப இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment