சென்னை:மகேஷ் பாபுவுடன் தெலுங்கில் ‘அத்தடு’ என்ற ஒரு படத்தில் நடித்தேன். இது முழுக்க முழுக்க காமெடி படம். அந்த படத்திற்கு பிறகு இப்போது முழுக்க முழுக்க காமெடி படமாக அமைதுள்ள ‘ஜெயம்’ ரவியின் ‘சகலகலா வல்லவன்’ படத்தில் சுராஜ் சார் இயக்கத்தில் நடித்துள்ளேன்.
காமெடி படங்களில் நடிப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அது மாதிரி மல்டிஸ்டார் படங்கள் என்றாலும் எனக்கு மிகவும் பிடிக்கும்! ‘
ஜெயம்’ ரவி, அஞ்சலி, சூரி, பிரபு சார் என ‘சகலகலாவல்லவன்’ ஒரு மல்டி ஸ்டார் படமாக அமைந்துள்ளது. மல்டிஸ்டார் படம் என்றால் படப்பிடிப்பு இடைவேளையில் அரட்டை அடிக்க நிறைய பேர் இருப்பார்கள்! ‘ஜெயம்’ ரவியுடன் நான் இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் இது. ‘அத்தடு’ படத்திற்கு பிறகு ஒரு முழுநீள காமெடி படத்தில் நடித்த திருப்தி இப்போது ‘சகலகலாவல்லவன்’ படத்தில் நடித்தபோது கிடைத்துள்ளது.
இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக ஜாலியான படமாக அமைந்துள்ளது. எனக்கு இந்த வாய்ப்பை தந்த ‘லட்சுமி மூவி மேக்கார்ஸ்’ நிறுவனத்திற்கு நன்றி’’ என்றார் த்ரிஷா நேற்று சென்னையில் நடைபெற்ற ‘சகலகலாவல்லவன்’ பட புரொமோஷன் நிகழ்ச்சியில்.
No comments:
Post a Comment