.

.

Friday, July 31, 2015

புலி இல்லாமல் புலி பட விழா!!!

31st of July 2015
சென்னை:சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் 'இந்த நிலையில், படம் ஆரம்பித்த நாள் முதல் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருந்த படக்குழுவினர் இன்று சந்திப்பதாக தெரிவித்தனர். என்ன புலி படத்தில் புலியாக நடிக்கும் நாயகன் விஜய், மான்களான ஹன்சிகா, ஸ்ருதி என நடிகர்கள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை. படத்தின் தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார், ஷிபு தமீம், ஒளிப்பதிவாளர் நடராஜ், கலை இயக்குனர் முத்துராஜ், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், கிராபிக் டிசைனர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசுகையில், "ஒரு நல்ல தருணத்தில் உங்களை சந்திப்பேன் என்று கூறியபடி எங்கள் தயாரிப்பாளர் ஷிபு தமீம் மற்றும் இயக்குநர் சிம்புதேவன் இவர்களுடன் இணைந்து படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு முன் பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டும் என்று விரும்பினோம். தற்போது அது நடந்துள்ளது.

இதுவரைக்கு நடந்தது எல்லாமே எனக்கு வியப்பாகத்தான் இருக்கிறது, விஜய் சார் என்னையும், ஷிபு அவர்களையும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்க சொல்லி அதில் நடிக்க ஒப்புக் கொண்டது. அதேமாதிரி சிம்புதேவன் சார் இந்த மாதிரி ஒரு அற்புதமான கதையை எடுக்க முன்வந்ததும் சரி எங்களால் நம்ப முடியாத ஒரு சந்தோஷமாகவே இருக்கிறது.

புலி படத்துல இதுவரை இணையாத ஒரு நட்சத்திரங்கள் சேர்ந்து நடித்துக் கொடுத்தது. ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி, சுதீப் என இவர்கள் அனைவரும் இந்த படத்தில் நடிக்க முக்கிய காரணம் படத்தின் கதைதான். புலி திரைப்படம் இதுவரை விஜய் படத்தில் இல்லாத ஒரு பிரம்மாண்டத்தை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.

ஸ்ரீதேவி மேடம் இந்த படத்துல நடிக்க நாங்கள் அழைத்த போது அவர் தமிழ் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தப்போவதில்லை என்று கூறினார். அதன்பின் போனி கபூரிடம் பேசி ஸ்ரீதேவியை சந்தித்து சிம்புதேவன் கதையை கூறிய பிறகு இந்த படத்தில் நான் நடிக்கவில்லையென்றால் அது தவறாகிவிடும் என்று கூறி புலி படக்குழுவுடன் இணைந்தார். அந்தளவுக்கு இந்த படத்தின் கதை இருக்கும்...

அடுத்ததாக புலி படத்துல ஆர்ட் மிகப்பிரம்மாண்டமாக இருக்கும் இதற்கு கலை இயக்குநர் முத்தையா அவர்களுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். மஹதீரா, நான் ஈ படங்களுக்கு கிராஃபிக்ஸ் அனிமேஷன் செய்த கமல் கண்ணன் இந்த படத்தில் கிராஃபிக்ஸ் பணிகளை செய்து கொண்டிருக்கிறார். புலி படத்தின் கிராஃபிக்ஸ் 6 நாடுகளில் உருவாகிக் கொண்டிருக்கிறது." என்றார்.

மற்றொரு தயாரிப்பாளர்  ஷிபு தமீம் பேசுகையில், "புலி படத்திற்கான வேலைகள் 2014ம் ஆண்டும் ஜனவரி மாதமே தொடங்கிவிட்டது, சிம்பு தேவன் படத்தில் விஜய் நடிக்கப்போகிறார் என்று செய்தி வெளியான அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து பத்திரிக்கை மற்றும் இணையதளங்களின் ஆதரவு என்னால் நம்ப முடியாதளவுக்கு இருக்கிறது. இதற்கு காரணம் இளைய தளபதி விஜய் அப்படியில்லையென்றால் ஒருவேளை பி.டி.செல்வகுமார் பத்திரிக்கையாளர்களிடையே வைத்திருக்கும் நல்லுறவாக இருக்கலாம் அதுவும் இல்லையென்றால் சிம்பு தேவன் பத்திரிக்கை துறையிலிருந்து வந்ததால் இருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் நட்ராஜ் இந்த படத்தில் அவரை ஒளிப்பதிவு செய்ய வைக்கலாமா என்ற சந்தேகத்தில்தான் அவரை அணுகினோம். அவர் அப்போது படங்களில் நடிப்பதை முழுநேர வேலையாக செய்து கொண்டிருந்தார். விஜய் சார் படத்துக்கு நீங்கதான் ஒளிப்பதிவு செய்யணும் என்று சொன்னதுமே ஒப்புக் கொண்டார் அவருக்கு நன்றி.

ஸ்ரீதேவி ஏற்கனவே பி.டி.செல்வகுமார் கூறியதுபோல ஆரம்பத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை, அவரது கணவர் போனி கபூரை அலைபேசியில் அழைத்து அவரிடம் பேசி அதன்பின் ஸ்ரீதேவியை சந்தித்து கதையை கூறிய பிறகு இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இதுவரை புலி படத்துக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு என் நன்றி, தொடர்ந்து உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை என்று விரும்பி வேண்டிக் கொள்கிறேன்." என்றார்.

ஒளிப்பதிவாளர் நடராஜ் பேசுகையில், "துப்பாக்கி படத்துல நான் ஒரு பாட்டுக்கு ஒளிப்பதிவு செய்து கொடுத்தேன் அப்போதே விஜய் சார் என்னை அழைத்து கூடிய விரைவில் ஒரு புதுமையான கதையம்சத்தில் ஒரு படத்தில் நடிக்கப்போகிறேன் அந்த படத்துக்கு நீங்கதான் ஒளிப்பதிவு என்று கூறினார். நானும் சரி என்று கூறிவிட்டேன்.

அதன்பின் ஒரு நாள் எனக்கு ஃபோன் செய்து இயக்குநர் சிம்புதேவனிடம் கதையை கேட்க சொன்னார் நானும் கதையை கேட்டபின் இப்படி ஒரு சுவாரஸ்யமான கதையில் நான் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் புலி திரைப்படம் குடும்பத்துடன் அனைவரும் வந்து பார்க்கக்கூடிய வகையில் உருவாகியுள்ளது.

தயாரிப்பாளர்களை பற்றி நான் கூறியாக வேண்டும் 2015ம் ஆண்டு அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்றால் அது புலி படம்தான். எனக்கு என்ன சாதனங்கள் வேண்டுமென்றாலும் அதனை உடனே வரவழைத்து கொடுத்தார்கள். 140 நாட்கள் படத்தின் ஷூட்டிங் நடந்தது எந்தவொரு நாளும் யார் என்ன கேட்கிறார்களோ அது கிடைத்தது, யாருக்கும் இல்லை என்ற பதில் வந்ததேயில்லை. அந்தளவுக்கு பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீம் உறுதுணையாக இருந்தார்கள்.

அதன்பின் படத்தின் பாடல்கள் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. திரையில் பார்க்கும்போது அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும்." என்று தெரிவித்தார்.
புலி' படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment