சென்னை:ஆர்யா, சந்தானம் நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் “வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க” இசை வெளியீட்டு விழா,
ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம் நடித்திருக்கும்,படத்தின் டீஸர் வெளியாகியிருக்கிறது. இந்நேரம் தமிழகத்தில் உள்ள அனைவரும் அதனை பார்த்திருப்பார்கள். டீஸர் முடிவில் பாடல் வருகிறது.
வாசுவும் சரவணனும்
ஒண்ணா படிச்சவங்க,
ஊரில் உள்ள பார்களில் எல்லாம்
சேர்ந்தே குடிச்சவங்க.
குடித்தால் போதை வருகிறதோ இல்லையோ. டாஸ்மாக்கை காண்பித்தால் திரையரங்கில்
கைத்தட்டல் காதை பிளக்கிறது. பொண்ணாலதான் குடிக்க வந்தேன் என்று
தத்துபித்து வசனம் வைத்தால் விசிலடித்தே ஓய்ந்து போகிறார்கள். கைத்தட்டல்
கிடைக்கவும், படத்தை ஓட வைக்கவும் இயக்குனர்கள் கண்டு பிடித்த குறுக்கு
வழிதான் குடி சம்பந்தமான காட்சிகள்.
ஆண், பெண் பேதமின்றி மாணவர்களே குடிக்கு அடிமையாகும் காலத்தில் நாம்
இருக்கிறோம். ராஜேஷை போன்றவர்கள் அதனை அறுவடை செய்ய ஆவேசத்துடன்
காத்திருக்கிறார்கள். தெருவுக்கு தெரு திறந்து வைத்திருக்கும் மதுக்கடைகளை
மூடுவதற்கு அரசு முன்வர வேண்டும். குறைந்தபட்சம் அதன் எண்ணிக்கையாவது
குறைக்க வேண்டும்.
குடிக்கு எதிரான மனோநிலையை வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க டீஸர்
தீவிரப்படுத்தியிருக்கிறது. எந்த ஒரு விஷயமும் அதன் எல்லையை தாண்டும்
போதுதான் கண்டிக்கப்படும், தடுக்கப்படும். இந்த டீஸரின் மூலம் எல்லையை
கடந்திருக்கிறார் ராஜேஷ். அதற்கான எதிர்விளைவை தணிக்கையின் போது அவர்
கண்டிப்பாக எதிர்கொண்டே ஆக வேண்டும்.
No comments:
Post a Comment