.

.

Tuesday, October 20, 2015

நடிகர் சங்க அலுவலகம் திறப்பு!!!

20th of October 2015
சென்னை:தென்னிந்திய நடிகர் சங்கம் சென்னையில், நேற்று தற்காலிக இடத்தில் திறக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். 

பழம் பெரும் நடிகை சச்சுவுக்கு, வாழ்நாள் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.சங்கத்திற்கு சொந்தமான, சென்னை, தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சங்கத்திற்கான தற்காலிக அலுவலகம் திறக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை ஏற்றனர்.

நாசர், விஷால், கார்த்திக்கு மாலையிட்டு, பூசணி உடைத்து அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். நடிகர் சங்க தேர்தலில் ஓட்டு போட முடியாமல் திரும்பி சென்ற பழம் பெரும் நடிகை சச்சுவுக்கு, வாழ்நாள் உறுப்பினருக்கான அடையாள அட்டையை நாசர், விஷால் உள்ளிட்டோர் வழங்கினர்.

No comments:

Post a Comment